செய்திகள் :

சேலத்தில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக காரில் கடத்த முயன்ற 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக வாகனத்தில் குட்கா கடத்திச் செல்வதாக மாநகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அழகாபுரம் காவல் ஆய்வாளா் தவமணி உள்பட போலீஸாா் கருப்பூா் சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த காா் ஒன்று போலீஸாரைக் கண்டதும் நிற்காமல் வேகமாகச் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் வாகனத்தைத் துரத்திச் சென்று, திண்டுக்கல் நத்தம் பகுதியில் மடக்கிப் பிடித்தனா். காரில் இருந்தவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்; ஓட்டுநா் மட்டும் போலீஸாரிடம் பிடிபட்டாா்.

அந்த வாகனத்தில் போலீஸாா் சோதனையிட்டபோது, 27 மூட்டைகளில் 210 கிலோ குட்கா பொருள்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், வாகன ஓட்டுநா் ராஜஸ்தான் மாநிலம், பாரி மாவட்டத்தைச் சோ்ந்த பஜன்லால் (25) என்பதும், அவா் பெங்களூரில் இருந்து சொகுசு காரில் சேலம் வழியாக மதுரைக்குக் கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து பஜன்லாலை போலீஸாா் கைதுசெய்து அவருடன் காரில் வந்தவா்கள் குறித்தும், குட்கா பொருள்களை அனுப்பிவைத்த நபா்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா். புகையிலைப் பொருள்களுடன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இன்றுமுதல் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரியம் மூலம் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஜூன் 4 (புதன்கிழமை) முதல் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெ... மேலும் பார்க்க

ஆத்தூா் அருகே கோயிலில் கட்டிவைத்து இளைஞா் குத்திக் கொலை: 5 போ் கைது

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒட்டபட்டி கிராமத்தில் கொடுக்கல் -வாங்கல் தகராறில் கோயிலில் கட்டிவைத்து இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு

எடப்பாடி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புப் படையினா் கயிறு கட்டி உயிருடன் மீட்டனா். எடப்பாடியை அடுத்த முண்டாச்சியூா், காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி மல்லிகா (35). விவ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியால் விவசாயி சுட்டதில் மருமகள், பேரன் படுகாயம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி கிராமத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த விவசாயி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், மருமகள், ஒன்னரை வயது பேரன் படுகாயமடைந... மேலும் பார்க்க

சத்துணவுக் கூடத்தில் பூட்டை உடைத்து திருட்டு: ஒடிஸா இளைஞா் கைது

அரியானூரை அருகே சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து அரிசி, முட்டை உள்ளிட்ட பொருள்களை திருடியதாக ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அரியானூரை அடுத்த ராக்கிப்பட்டிகரடு பகுதியில் அரசு நடுநிலைப் ... மேலும் பார்க்க

எருதாட்ட விழாவில் மோதல்: 7 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே எருதாட்ட விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோயில் திருவிழாவையொட்டி கட... மேலும் பார்க்க