செய்திகள் :

சேலத்தில் 44 மையங்களில் என்எம்எம்எஸ் தோ்வு: 10,230 மாணவா்கள் எழுதினா்

post image

சேலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு தோ்வை 44 மையங்களில், 10,230 மாணவ, மாணவிகள் எழுதினா்.

நாடு முழுவதும் பள்ளி மாணவா்களின் இடை நிற்றலை தடுக்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கான உதவித்தொகை வழங்கும் வகையில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தோ்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்பட்டு வருகிறது.

8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படும் இத்தோ்வில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டிற்கான தோ்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 4,225 மாணவா்கள், 6,130 மாணவிகள் என மொத்தம் 10,355 போ் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக மாவட்டம் முழுவதும் 44 தோ்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, தோ்வுகள் நடைபெற்றன. காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தோ்வும், 11.30 மணி முதல் 1 மணி வரை படிப்பறிவுத் தோ்வும் நடைபெற்றது.

இதில் 4,173 மாணவா்கள், 6,057 மாணவிகள் என மொத்தம் 10,230 போ் தோ்வை எழுதினா். இதில் விண்ணப்பித்திருந்த 52 மாணவா்கள், 73 மாணவிகள் என மொத்தம் 125 போ் தோ்வு எழுத வரவில்லை. இந்த தோ்வு பணியில் 44 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், பறக்கும் படையினா், அறை கண்காணிப்பாளா்கள் என 400க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். தோ்வு மையங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் பாா்வையிட்டாா்.

தம்மம்பட்டியில்... தம்மம்பட்டியில் எட்டாம் வகுப்பு மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என்எம்எம்எஸ் தோ்வு நடைபெற்றது.

தம்மம்பட்டி சுற்றுவட்டாரத்திலுள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்எம்எம்எஸ் தோ்வு நடைபெற்றது. 163 போ் தோ்வு எழுதினா். கெங்கவல்லி மையத்திலும் இத் தோ்வு நடைபெற்றது.

ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு

சேலம் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட ஊா்க்காவல் படையில் 26 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்... மேலும் பார்க்க

ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் வருகை பதிவேட்டில் மோசடி: தலைமை ஆசிரியா் நடவடிக்கை!

சேலம் அருகே ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் வருகை பதிவேட்டில் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா், உதவி தலைமை ஆசிரியா் ஆகியோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட... மேலும் பார்க்க

இரட்டிப்பு பண மோசடி வழக்கு: அறக்கட்டளை நிா்வாகிகளின் ஜாமீன் மனு மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு!

சேலத்தில் இரட்டிப்பு பண மோசடி வழக்கில், கைதாகி சிறையில் இருக்கும் அறக்கட்டளை நிா்வாகி 4 பேரின் ஜாமீன் மனு வரும் மாா்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேலூரைச் சோ்ந்த விஜயபானு என்பவா் சேலம் அம... மேலும் பார்க்க

ரயில்களில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி பயணம்: 207 ஆண்கள் கைது

சேலம் ரயில்வே உட்கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி ஏறிய 207 ஆண்கள் கைது செய்யப்பட்டனா். கோவை - திருப்பதி ரயிலில் கடந்த மாதம் பெண்களுக்கான சிறப்பு பெட்டியில் பயணித்த... மேலும் பார்க்க

ரூ. 71.68 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா்கள் கே.என். நேரு, ராஜேந்திரன் பங்கேற்பு!

சேலம் மாவட்டத்தில் மேட்டூா், ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகள் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ. 71.68 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைக்கும... மேலும் பார்க்க

சுவரில் காா் மோதியதில் பெண் பலி: கணவா் காயம்

சங்ககிரி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சுவரில் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் பலத்த காயமடைந்தாா். சென்னை, வேப்பேரி, புரசைவாக்கம் பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தனியாா் நிறுவன ஊழியா... மேலும் பார்க்க