செய்திகள் :

சேலம்: கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த அரசு மருத்துவர், புரோக்கர் கைது

post image

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்து வருவதாக சுகாதாரத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பிணிப் பெண் ஒருவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட மருத்துவர் மற்றும் புரோக்கர்

அங்கு அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டு ரேடியாலஜி மருத்துவர் ஒருவர் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரை மடக்கிப் பிடித்த சுகாதாரத்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குடும்ப நலப்பணி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர், சேலம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் நந்தினி மற்றும் ஆத்தூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் யோகானந்த் ஆகியோர் சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த மருத்துவர் தியாகராஜன் என்பதும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ரேடியோலாஜி துறையில் பணிபுரிந்து கொண்டு, அங்கு ஸ்கேன் செய்ய வரும் பெண்களிடம் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்து வந்ததும் தெரியவந்தது.

சேலம் காந்தி ரோட்டில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் பணிபுரிந்து வரும் அம்மாபேட்டை வாய்க்கால் பட்டறையைச் சேர்ந்த ஸ்ரீராம், அவருக்கு உடந்தையாக இருந்து புரோக்கராக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

Pregnant woman

இதையடுத்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் நந்தினி, சேலம் அரசு மருத்துவமனையின் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டாக்டர் தியாகராஜன் மற்றும் புரோக்கர் ஸ்ரீராம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்ட விரோதமாக கருவில் உள்ள குழந்தை பாலினத்தை அரசு மருத்துவமனையில் தெரிவித்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மதுரை: போன் செய்து வரச் சொன்ன கணவர் கொலை; பார்க்கச் சென்ற இடத்தில் அதிர்ந்த மனைவி!

மதுரை பார்க் டவுன் 2-வது தெருவைச் சேர்ந்த ராஜ்குமார், முனிச்சாலைப் பகுதியில் பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சந்திரகலா என்ற மனைவியும் சந்தீப் என்ற மகனும் உள்ளனர். ராஜ்குமார் நேற்று இரவு தன... மேலும் பார்க்க

``மதத்தையும், துறவிகளையும் அவமதித்தால்'' - திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு; பகிரங்க மிரட்டல்

பாலிவுட் நடிகை திஷா பதானிபாலிவுட் நடிகை திஷா பதானி உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர் ஆவார். அங்குள்ள வீட்டில் திஷா பதானியின் பெற்றோர் வசித்து வருகின்றனர். அந்த வீட்டின் மீது மர்ம நபர் திடீரென துப... மேலும் பார்க்க

சருமத்தில் ஒவ்வாமை; உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்; ஜிம்மில் கொடுத்த புரோட்டின் பவுடர் காரணமா?

நீலகிரி மாவட்டம் குன்னூர், அட்டடி பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. அ.தி.மு.க -வைச் சேர்ந்த இவர் தற்போது குன்னூர் நகர மன்றத்தின் உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளி... மேலும் பார்க்க

சேலம்: ரவுடியுடன் திருமணம் மீறிய உறவிலிருந்த பெண்ணுக்கு டார்ச்சர்; முதியவர் அடித்துக் கொலை

சேலம் மாநகர் சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (65). விவசாயியான இவர் கடந்த 18.08.2025 அன்று வீட்டில் படுத்திருந்த போதும் மின்விசிறி கழன்று செல்லப்பன் தலையில் விழுந்ததாகக் கூ... மேலும் பார்க்க

சென்னை: கணவருக்குத் தெரியாமல் கடன்; நகைக்கடையில் திருட வந்த குடும்பத் தலைவி... கைதுசெய்த போலீஸ்!

திருவொற்றியூர், காலடிப்பேட்டை, சன்னதி தெருவில் குடியிருந்து வருபவர் தேவராஜ் ஜெயின் (54). இவர் அந்தப்பகுதியில் தங்க நகை விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். 11.09.2025-ம் தேதி மதியம் தேவராஜ் ஜெயி... மேலும் பார்க்க

சென்னை: பைக் டாக்ஸி ஓட்டும் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; கல்லூரி மாணவன் கைதான பின்னணி என்ன?

சென்னை, ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், குடும்பச் சூழல் காரணமாக பைக் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வருகிறார். 11.09.2025-ம் தேதி மதியம், கோயம்பேடு முதல் அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. வரை செ... மேலும் பார்க்க