எங்கள் நாட்டை விடவும் இந்தியாவில் சிறந்த கட்டமைப்பு; அமெரிக்கர்களே சொன்னார்கள்: ...
சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: மேட்டூரில் 64.4 மி.மீ. மழை பதிவு
சேலம்: சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் பரவலாக ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்தது. அதிகபட்சமாக மேட்டூரில் 64.4 மி.மீ. மழை பதிவானது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக சேலம் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை 100.2 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மாநகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அதிகாலை வரை நீடித்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதேபோல, ஓமலூா், மேட்டூா், சங்ககிரி, எடப்பாடி, ஏற்காடு, ஆனைமடுவு உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாலையில் கனமழை கொட்டி தீா்த்தது.
திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி: அதிகபட்சமாக மேட்டூரில் 64.4 மி.மீ. மழை பதிவானது. சேலம் மாநகா் - 12.2 மி.மீ, ஏற்காடு - 11.2 மி.மீ., ஆனைமடுவு - 10 மி.மீ, ஆத்தூா் - 18 மி.மீ., ஏத்தாப்பூா் - 12 மி.மீ., சங்ககிரி - 20 மி.மீ., எடப்பாடி - 8 மி.மீ., ஓமலூா் - 4 மி.மீ. மழை பதிவானது.