செய்திகள் :

சொந்த அக்காவிடம் ரூ.17 கோடி மோசடி - மலேசியாவுக்கு தப்ப முயன்ற அதிமுக கவுன்சிலர் கைது - என்ன நடந்தது?

post image

சொந்த அக்காவிடமே ரூ.17 கோடியை மோசடி செய்துள்ளார் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் ராஜா. இவர் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் மகன் ஆவார்.

தூத்துக்குடி மாநகராட்சியின் 59-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராஜா. இவரது மனைவி அனுஷா. இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ராஜாவின் அக்கா பொன்னரசியிடம் தனது நிறுவனமான ஒம்மீனா பார்மா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்டில் முதலீடு செய்யுமாறும், அப்படி செய்தால், அந்த நிறுவனத்தின் 16 சதவிகித பங்கை பொன்னரசிக்கு தருவதாகவும் கூறியுள்ளனர்.

மோசடி
மோசடி

இதை நம்பி, பொன்னரசி தனது கணவர் அசோக் குமாருக்கு நந்தம்பாக்கத்தில் இருக்கும் 2 ஏக்கர் சொத்தின் பத்திரத்தை அடமானம் வைத்து, வங்கியில் ரூ.11 கோடி கடன் வாங்கி கொடுத்திருக்கிறார். பொன்னரசி முதலீடு செய்த ரூ.11 கோடியை ராஜா அவருக்கு தெரியாமல் அஷுன் எக்ஸிம் என்ற வேறொரு நிறுவனத்திற்கு மாற்றி உள்ளார்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கல்குவாரி தொடங்க உள்ளதாகவும், அதில் முதலீடு செய்தால் கூடுதல் பங்கு தருவதாகவும் ராஜா கூறியுள்ளார். இதற்கும் பொன்னரசி தனது 300 சவரன் நகையை அடமானம் வைத்து ராஜாவிடம் பணம் கொடுத்திருக்கிறார். இந்த பணத்தில் ராஜா அவரது பெயரில் சுமார் 40 ஏக்கர் நிலத்தை வாங்கியிருக்கிறார்.

போலி கையெழுத்து

பின்னர், பொன்னரசிக்கு இந்தத் தொழிலில் பங்கு கொடுக்கக்கூடாது என்று அவரைப் போல போலி கையெழுத்து போட்டு, அவரது பங்குகளை தனது பெயருக்கு மாற்றியிருக்கிறார். கூடவே, போலி கையெழுத்து போட்டு பொன்னரசியின் ராஜினாமா கடிதத்தையும் தயார் செய்துள்ளார்.

இந்த இரு சம்பவத்தின் மூலமும் ராஜா தனது அக்கா பொன்னரசியிடம் இருந்து கிட்டத்தட்ட 17 கோடி ரூபாய் ஏமாற்றி மோசடி செய்துள்ளார் என பொன்னரசி சென்னை மத்திய குற்றப் பிரிவின் ராஜா மீது புகார் கொடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

இந்தப் புகாரைத் தொடர்ந்து, ராஜா வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிடக் கூடாது என்று அவருக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும், ராஜா சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு தப்பி செல்ல முயன்றிருக்கிறார். அதனால், அவரை அங்கேயே கைது செய்திருக்கிறது காவல் துறை.

பின்னர், மத்திய குற்றப்பிரிவு மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு வழக்குகள் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ஈரான் அணுசக்தி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்; அணு சக்தி கசிகிறதா? - பாதிப்புகள் என்ன... IAEA எச்சரிக்கை!

'ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது' - இது இஸ்ரேல்,3 ஈரான் மீது தாக்குதல் நடத்த முன்வைத்த குற்றச்சாட்டு. கடந்த வெள்ளிக்கிழமை (மே 13) முதல், இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு திட்ட இடங்க... மேலும் பார்க்க

Meta: ``வாட்ஸ் ஆப்பை அன்இன்ஸ்டால் செய்யுங்கள்" - ஈரானின் முடிவும் மெட்டாவின் பதிலும்

இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து வரும் போர் முடிவுக்கு வரவேண்டுமென்றால் ஈரானின் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க

DMK: "இந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், திணறுகிறது திமுக" - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

"பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாகப் பதில் சொல்லத் திராணியின்றி அமைச்சர் பரிவாரங்களை வரிசையாக அனுப்பும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த முறை அமைச்சர் நேருவைக் காவு கொடுத்திருக்கிறார்" என்று அ.த... மேலும் பார்க்க

Israel: ``இஸ்ரேல் நமக்காக மிக மோசமான செயலை செய்கிறது" - ஈரானை எதிர்க்கும் ஜெர்மன் சான்சிலர்

ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதாகக் குற்றம்சாட்டும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்திவருகிறது. இந்த நிலையில், கனடாவில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் ஜெர்மன் Ch... மேலும் பார்க்க

Pakistan: இஸ்ரேல் - ஈரான் மோதலால் அச்சத்துக்குள்ளாகும் பாகிஸ்தான்; அரசியல் ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

ஈரானில் இருக்கும் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியதால், பல ஈரானிய ராணுவ அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஈரானும் எதிர்த்தாக்குதலைக் கொடுத்துவருகிறது. இஸ்ரேல் - ஈரான் மோதலி... மேலும் பார்க்க

'திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது' - திருமா உடனான சந்திப்பு குறித்து வைகைச்செல்வன்

விசிக தலைவர் தொல். திருமாவளவனும், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனும் சில தினங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு குறித்து திருமாவளவனிடம் கேட்டப்போது, "அதிமுக முன்னாள் அமைச்சர் ... மேலும் பார்க்க