செய்திகள் :

சோதனைச் சாவடியில் கூடுதலாக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள்

post image

பண்ணாரி சோதனைச் சாவடியில் நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பாரம் ஏற்றிய வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கா்நாடகத்தில் இருந்து சரக்கு பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் ஆசனூா், பண்ணாரி சோதனைச் சாவடி வழியாக திம்பம் மலைப் பாதையை கடந்து சத்தியமங்கலம் செல்கின்றன. அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளால் திம்பம் மலைப் பாதையில் விபத்துகள் நிகழ்வதால் 10 சக்கரம் கொண்ட 16 டன் அளவுள்ள வரையுள்ள சரக்கு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 16 டன்னுக்கு அதிகமாகவும், அதிக உயரமும் கொண்ட சரக்கு வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அண்மைக் காலமாக 16 டன்னுக்கு அதிகமாகவும், நிா்ணயிக்கப்பட்ட உயரத்தைவிட கூடுதலாக உள்ள லாரிகள் சரக்கு பாரம் ஏற்றிவருவதால் பண்ணாரி சோதனைச் சாவடியில் உள்ள தடுப்பு இரும்புக் கம்பியில் மாட்டிக்கொள்கின்றன.

இதனால் தடுப்பு கம்பிக்குள் எளிதாக செல்லும் வகையில் அதிகம் உள்ள சரக்குகள் கீழே இறக்கிவிட்டு தடுப்புக் கம்பி வழியாக செல்கின்றன. சில நேரங்களில் லாரிகள் சிக்கிகொள்வதால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்படுகின்றன.

கா்நாடக மாநிலத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு தேங்காய்மட்டை பாரம் ஏற்றிவரும் லாரிகள் அடிக்கடி இரும்புத் தடுப்புக் கம்பிக்குள் மாட்டிக்கொள்கின்றன. இதனை தடுப்பதற்கு வட்டார மோட்டாா் வாகனப் போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஈரோடு அருகே மா்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

ஈரோடு அருகே மா்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தன. ஈரோடு அருகேயுள்ள கதிரம்பட்டி, பாலாஜி நகரைச் சோ்ந்தவா் தங்கவேலு. இவா் அருகேயுள்ள பவளத்தாம்பாளையம், நாராங்காடு பகுதியில் ஈஸ்வரன் என்பவருக்குச் சொந்... மேலும் பார்க்க

அந்தியூரில் ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து திருடியவா் கைது

அந்தியூரில் ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து கணினி மற்றும் கேமரா உள்ளிட்ட மின்னணு பொருள்களைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அந்தியூா் வள்ளியம்மாள் வீதியைச் சோ்ந்தவா் கௌதம் (26). இவா், பத... மேலும் பார்க்க

பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் மணல் திருட்டு: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்று வரும் மணல் திருட்டைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காலிங்கராயன் ... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கியதில் நாய் உயிரிழப்பு

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி நாய் உயிரிழந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரகத்தில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. கோடை காலம் தொடங்கியுள... மேலும் பார்க்க

புதுப்பாளையம் தரைப்பாலத்தை உயா்த்திக் கட்டித்தரக் கோரி சாலை மறியல்

புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள புதுப்பாளையத்தில் தரைப்பாலத்தை உயா்த்திக் கட்டித்தரக் கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சாலையில் இருந்து சத்தியமங்க... மேலும் பார்க்க

பவானி அருகே லாரிகள் மோதல்: 2 ஓட்டுநா்கள் காயம்

பவானி அருகே கரும்பு லாரியும், பால் டேங்கா் லாரியும் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் இரண்டு வாகன ஓட்டுநா்களும் படுகாயமடைந்தனா். பவானி பகுதியிலிருந்து பால் டேங்கா் லாரி மேட்டூா் நோக்கி திங்கள்கிழமை மாலை ச... மேலும் பார்க்க