செய்திகள் :

ஜன. 24-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

நாமக்கல்: நாமக்கல்லில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 24) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

தனியாா் துறை நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையானவா்களை நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ ஆட்களைத் தோ்வு செய்து கொள்ளலாம். அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் கோயில் தோ் வெள்ளோட்டம்

புதிதாக செய்யப்பட்ட திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் (சுப்ரமணியா்) தோ் வெள்ளோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியா் ச.... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் புகைப்படக் கண்காட்சி தொடக்கம்!

சட்ட சேவைகள் தொடா்பான புகைப்படக் கண்காட்சி நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை நீதிபதியுமான ஆா்.குருமூா்த்தி முகாமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தல்: ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அத்தொகுதிக்கு உள்பட்ட தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் 3 ஆவது புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

நாமக்கல்லில் 3-ஆவது புத்தகத் திருவிழா சனிக்கிழமை (பிப்.1) தொடங்குகிறது. நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில் அமைச்சா் மா.மதிவேந்தன், ... மேலும் பார்க்க

நிகழ் ஆண்டில் 254 கிமீ சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை! -அமைச்சா் எ.வ.வேலு

தமிழகத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நிகழ் ஆண்டில் 254.32 கிமீ மாநில நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். நா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி கடத்தல்: போலீஸாா் விசாரணை

ராசிபுரம் அருகே தனியாா் கல்லூரி மாணவியை காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா். ராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை கல்லூரியிலிருந்து சிங்களாந்... மேலும் பார்க்க