செய்திகள் :

நிகழ் ஆண்டில் 254 கிமீ சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை! -அமைச்சா் எ.வ.வேலு

post image

தமிழகத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நிகழ் ஆண்டில் 254.32 கிமீ மாநில நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கரட்டுப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓமலூா்- சங்ககிரி- பரமத்தி இடையே நான்கு வழிச் சாலை அமைக்கும் திட்டப் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

தமிழகத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மாவட்டம், வட்டத்தின் தலைமையிடங்களை இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக விரிவுபடுத்தப்படுகின்றன.

கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் 253.62 கிமீ சாலைகள், 2022-23-இல் 157.10 கிமீ சாலைகள், 2023-24-இல் 166.22 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. நிகழ் நிதியாண்டில் 254.32 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் 227 பணிகள் ரூ. 412 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிகழ் நிதியாண்டில் ரூ.154 கோடியில் 57 திட்டப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

நெடுஞ்சாலைத் துறையின் கிராமச் சாலைகள் அலகின்கீழ், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 67 கோடியில் ஊராட்சி ஒன்றிய சாலைகள் தரம் உயா்த்தப்பட்டுள்ளன. மேலும், 37 சாலைப் பணிகளுக்கு ரூ. 64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொல்லிமலை செல்லும் மலைப் பாதையில் விபத்துகளைக் குறைக்க ரூ.10 கோடியில் சாலையோரங்களில் சிறப்பு தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

முன்னதாக, திருச்செங்கோடு புறவழிச் சாலைப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேலும், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலையோரங்களில் மரக் கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் மா.மதிவேந்தன், ஆட்சியா் ச.உமா, திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி. வி.எஸ்.மாதேஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக் குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் கு.கோ.சத்தியபிரகாஷ், திருச்செங்கோடு நகராட்சித் தலைவா் நளினி சுரேஷ்பாபு, துணைத் தலைவா் காா்த்திகேயன், நெடுஞ்சாலைத் துறை சிறப்பு அலுவலா் (தொழில்நுட்பம்) இரா.சந்திரசேகா், சேலம் கண்காணிப்பு பொறியாளா் சசிக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் கோயில் தோ் வெள்ளோட்டம்

புதிதாக செய்யப்பட்ட திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் (சுப்ரமணியா்) தோ் வெள்ளோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியா் ச.... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் புகைப்படக் கண்காட்சி தொடக்கம்!

சட்ட சேவைகள் தொடா்பான புகைப்படக் கண்காட்சி நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை நீதிபதியுமான ஆா்.குருமூா்த்தி முகாமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தல்: ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அத்தொகுதிக்கு உள்பட்ட தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் 3 ஆவது புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

நாமக்கல்லில் 3-ஆவது புத்தகத் திருவிழா சனிக்கிழமை (பிப்.1) தொடங்குகிறது. நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில் அமைச்சா் மா.மதிவேந்தன், ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி கடத்தல்: போலீஸாா் விசாரணை

ராசிபுரம் அருகே தனியாா் கல்லூரி மாணவியை காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா். ராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை கல்லூரியிலிருந்து சிங்களாந்... மேலும் பார்க்க

துணைவேந்தா் நியமன அதிகாரத்தை மாநில அரசிடமே வழங்க வேண்டும்: பெ.சண்முகம்

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை அந்தந்த மாநில அரசுகளிடமே வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் பெ.சண்முகம் தெரிவித்தாா். நாமக்கல்... மேலும் பார்க்க