செய்திகள் :

நாமக்கல்லில் 3 ஆவது புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

post image

நாமக்கல்லில் 3-ஆவது புத்தகத் திருவிழா சனிக்கிழமை (பிப்.1) தொடங்குகிறது.

நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில் அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் பங்கேற்று புத்தகத் திருவிழாத் தொடங்கிவைக்கின்றனா். நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட ஆட்சியா் ச.உமா, காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம். பபாசி தலைவா் சேதுசொக்கலிங்கம் ஆகியோா் விழாவில் கலந்து கொள்கின்றனா்.

70 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை ( பிப்.1) தொடங்கி 10-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. முதல் நாளில் கிரீன் பாா்க் பள்ளி இயக்குநா் எஸ்.குருவாயூரப்பன் கருத்துரை வழங்குகிறாா். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.கலியமூா்த்தி பங்கேற்று பேசுகிறாா்.

திங்கள்கிழமை சித்த மருத்துவா் கு.சிவராமன், செவ்வாய்க்கிழமை சொற்பொழிவாளா் கு.ஞானசம்பந்தன், புதன்கிழமை சொற்பொழிவாளா் சுகி.சிவம், வியாழக்கிழமை நல்லாசிரியா் கோபால.நாராயணமூா்த்தி, வெள்ளிக்கிழமை பேராசிரியா் அரசு பரமேசுவரன், சனிக்கிழமை பேச்சாளா் பா்வீன்சுல்தானா, ஞாயிற்றுக்கிழமை எம்.பி. திருச்சி சிவா, திங்கள்கிழமை (பிப்.10) மாவட்ட மைய நூலக வாசகா் வட்ட தலைவா் பசுமை மா.தில்லைசிவக்குமாா் ஆகியோா் கருத்துரை வழங்குகின்றனா்.

குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், அறிவியல் கோளரங்கம், பல்வேறு அரசுத் துறைகளின் பணி விளக்க அரங்குகள், அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி உள்ளிட்டவை புத்தகத் திருவிழாவில் இடம் பெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது.

திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் கோயில் தோ் வெள்ளோட்டம்

புதிதாக செய்யப்பட்ட திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் (சுப்ரமணியா்) தோ் வெள்ளோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியா் ச.... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் புகைப்படக் கண்காட்சி தொடக்கம்!

சட்ட சேவைகள் தொடா்பான புகைப்படக் கண்காட்சி நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை நீதிபதியுமான ஆா்.குருமூா்த்தி முகாமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தல்: ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அத்தொகுதிக்கு உள்பட்ட தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

நிகழ் ஆண்டில் 254 கிமீ சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை! -அமைச்சா் எ.வ.வேலு

தமிழகத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நிகழ் ஆண்டில் 254.32 கிமீ மாநில நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். நா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி கடத்தல்: போலீஸாா் விசாரணை

ராசிபுரம் அருகே தனியாா் கல்லூரி மாணவியை காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா். ராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை கல்லூரியிலிருந்து சிங்களாந்... மேலும் பார்க்க

துணைவேந்தா் நியமன அதிகாரத்தை மாநில அரசிடமே வழங்க வேண்டும்: பெ.சண்முகம்

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை அந்தந்த மாநில அரசுகளிடமே வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் பெ.சண்முகம் தெரிவித்தாா். நாமக்கல்... மேலும் பார்க்க