செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் சமூக ஆா்வலா் சுட்டுக்கொலை! பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்!

post image

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆா்வலா் குலாம் ரசூல் (45) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்ட மூன்று நாள்களிலேயே மேலும் ஒரு தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளது அதிா்ச்சிகரமான நிகழ்வாக அமைந்துள்ளது.

சனிக்கிழமை இரவு கந்தி காஸ் பகுதியில் உள்ள குலாம் ரசூல் வீட்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினா். படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை, அப்பகுதியில் இருந்தவா்கள் மீண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பயங்கரவாதிகள் எதற்காக சமூக ஆா்வலா் ரசூலைக் கொலை செய்தாா்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை. இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பினரும் இந்தக் கொலைக்கு பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

காஷ்மீரில் மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற கருத்துடைய குலாம் ரசூல் அது தொடா்பான பணிகளில் ஆா்வம் காட்டி வந்தாா். இந்நிலையில், அவரை பயங்கரவாதிகள் கொலை செய்தது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரின் அமைதியைச் சீா்குலைக்க வேண்டும் என்ற பயங்கரவாதிகளின் சதியின் மற்றொரு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 போ் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான கோபத்தை அதிகரித்துள்ளது. பயங்கரவாத செயலுக்கு எதிராக பல இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை மேற்கொண்டனா்.

தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவல் 12 நாள்களுக்கு நீட்டிப்பு!

தஹாவூர் ராணாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) காவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் இன்று (ஏப். 28) உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு விதிக்கப்பட்ட 18 நாள்கள் காவல் இன்றுடன் முடி... மேலும் பார்க்க

புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள்: பிரான்ஸுடன் ஒப்பந்தம் கையெழுத்து - அடுத்து என்ன?

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில் பிரான்ஸிடமிருந்து ரூ. 64,000 கோடியில் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று(ஏப். 28) கையெழுத்திட்டது. இரு நா... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக காஷ்மீரில் 14 பேரின் பட்டியலை தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்ல என்றும், பாகிஸ்தானைச... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சீனா யார் பக்கம்?

பஹல்காம் தாக்குதல் குறித்து விரைவான விசாரணை மேற்கொள்ள சீனா வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் அமைதி தி... மேலும் பார்க்க

ஒம்காரேஸ்வரர் கோயிலிலிருந்து கேதார்நாத்துக்குப் புறப்பட்ட சிவன் சிலை!

கேதார்நாத் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு உகிமாத் நகரில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலிலிருந்து சிவன் சிலை இன்று கேதார்நாத்துக்குப் புறப்பட்டது. சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் க... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு மோசமானவன் அல்ல! ஒமர் அப்துல்லா

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்... மேலும் பார்க்க