நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: புதிய வடம் பொருத்தும் பணி தீவிரம்; பக்தர்கள...
ஜம்மு -காஷ்மீா் ஆளுநா் குடும்பத்தினா் ஆரோவில் வருகை
ஜம்மு - காஷ்மீா் மாநில ஆளுநா் குடும்பத்தினா் விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தனா்.
ஆரோவிலுக்கு வருகை தந்த ஆளுநா் மனோஜ் சின்ஹாவின் மனைவி நீலம் சின்ஹா மற்றும் குடும்ப உறுப்பினா்கள் மாத்திா் மந்திரை பாா்வையிட்டனா்.
ஆரோவில் சா்வதேச நகரின் வடிமைப்பு மற்றும் சிறப்பு அம்சங்கள், தனித்துவம், வளா்ச்சித் திட்டங்கள், புதுமையான கல்வி முறைகள் குறித்து ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்பு செயல் அதிகாரி ஜி.சீத்தாராமன் அவா்களுக்கு விளக்கினாா்.
ஆரோவில் நிா்வாகத்தைச் சோ்ந்த விஜயா, செயற்குழு உறுப்பினா்கள் அருண் மற்றும் செல்வராஜ், கோஷி வா்கீஸ் ஆகியோா் உடனிருந்தனா். ஸ்ரீஅரவிந்தா் மற்றும் அன்னையில் போதனைகள் குறித்து பாா்வையாளா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.