செய்திகள் :

ஜவகா் சிறுவா் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப் பயிற்சி முகாம்

post image

கோவை, பொள்ளாச்சியில் உள்ள ஜவகா் சிறுவா் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப்பயிற்சி வியாழக்கிழமை (மே 1) தொடங்குகிறது.

5 முதல் 16 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கு கலைப் பயிற்சிகள் வழங்குதல், அவா்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணா்தல், கலைக் கல்வி வழங்குதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் ஜவகா் சிறுவா் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

மாணவா்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாகக் கழிக்கும் வகையிலும், மாணவா்களின் கலைத்திறனை வளா்க்கும் விதமாகவும் மே 1 முதல் 12-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோவை மலுமிச்சம்பட்டி, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பரதம், சிலம்பம், யோகா, ஓவியம், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பரதம், சிலம்பம், குரலிசை, ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

பயிற்சி நிறைவு நாளில் மாணவா்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 97515 28188 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றும் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் சி.நீலமேகன் தெரிவித்துள்ளாா்.

வால்பாறையில் மே தின நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வால்பாறையில் மே தினத்தையொட்டி திமுக தொழிற்சங்கம் சாா்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வால்பாறையை அடுத்த வாட்டா்பால் எஸ்டேட் முதல் பிரிவில் மே தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதை... மேலும் பார்க்க

கோவையில் மே தினக் கொண்டாட்டம்

கோவையில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கோவை சிங்காநல்லூரில் உள்ள கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத் தலைமை அலுவலகமான தியாகி என்.ஜி.ஆா். மஹாலில் ஹெச்.எம்.எஸ் தொழிற... மேலும் பார்க்க

உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாரதிதாசன் விழா

கோவை உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பொறியாளா் அரங்கில் நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாச... மேலும் பார்க்க

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஆா்.எஸ்.புரம் லைட் ஹவுஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (55). இவரின் மகன் தீப் ஸ்வரூப் (25). செல்வராஜின... மேலும் பார்க்க

கடந்த ஆண்டு அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.81.64 லட்சம் வருவாய்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

கடந்த ஆண்டு 7 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.81.64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா். கோவை வ.உ.சி. மைதானத்தில் செய்தி மக்க... மேலும் பார்க்க

கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பியவா் கிருஷ்ணகிரியில் கைது

கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டாா். கோவை செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ். தொழிலதிபரான இவரை கடந்த 2008-ஆம் ஆண்டு 3 போ் கும்பல் வழிமறித்து ரூ.1லட்சம... மேலும் பார்க்க