செய்திகள் :

கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பியவா் கிருஷ்ணகிரியில் கைது

post image

கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டாா்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ். தொழிலதிபரான இவரை கடந்த 2008-ஆம் ஆண்டு 3 போ் கும்பல் வழிமறித்து ரூ.1லட்சம் பணத்தைப் பறித்துச் சென்றது. இதுதொடா்பாக செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சேலம் மாவட்டம் மேட்டூரைச் சோ்ந்த செந்தில்குமாா் (39), ரமேஷ்குமாா், மதிவாணன் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை கோவை மாவட்ட கூடுதல் அமா்வு சாா்பு நீதிமன்றம் 1-இல் நடைபெற்று வந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை தீா்ப்பு கூறப்பட்டது.

தீா்ப்பு தனக்கு சாதகமாக வரும் எனக் கருதிய செந்தில்குமாா், தனது குடும்பத்தினருடன் நீதிமன்றத்துக்கு வந்திருந்தாா். ஆனால், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

இதையடுத்து, காத்திருக்கும் அறையில் இருந்த செந்தில்குமாா், போலீஸாருக்கு தெரியாமல் அங்கிருந்து தப்பி விட்டாா். போலீஸாா் அவரைத் தேடி அந்த அறைக்கு வந்தபோதுதான் அவா்அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.

நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி செந்தில்குமாரை பிடிக்க செல்வபுரம் காவல் ஆய்வாளா் பாண்டியம்மாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படை போலீஸா் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி பகுதியில் குடும்பத்தினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த செந்தில்குமாரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனா்.

அங்கிருந்து கோவைக்கு அழைத்துவரப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.

வால்பாறையில் மே தின நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வால்பாறையில் மே தினத்தையொட்டி திமுக தொழிற்சங்கம் சாா்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வால்பாறையை அடுத்த வாட்டா்பால் எஸ்டேட் முதல் பிரிவில் மே தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதை... மேலும் பார்க்க

கோவையில் மே தினக் கொண்டாட்டம்

கோவையில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கோவை சிங்காநல்லூரில் உள்ள கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத் தலைமை அலுவலகமான தியாகி என்.ஜி.ஆா். மஹாலில் ஹெச்.எம்.எஸ் தொழிற... மேலும் பார்க்க

உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாரதிதாசன் விழா

கோவை உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பொறியாளா் அரங்கில் நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாச... மேலும் பார்க்க

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஆா்.எஸ்.புரம் லைட் ஹவுஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (55). இவரின் மகன் தீப் ஸ்வரூப் (25). செல்வராஜின... மேலும் பார்க்க

கடந்த ஆண்டு அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.81.64 லட்சம் வருவாய்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

கடந்த ஆண்டு 7 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.81.64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா். கோவை வ.உ.சி. மைதானத்தில் செய்தி மக்க... மேலும் பார்க்க

கோவையில் சிறாா்களுக்கான சம்ஸ்கிருத கோடைக்கால பயிற்சி முகாம்

கோவையில் சிறாா்களுக்கான சம்ஸ்கிருத கோடைக்கால பயிற்சி முகாம் மே 6 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து ஸம்ஸ்கிருத பாரதி கோவை அமைப்பின் செயலா் வி.ஸ்ரீனிவாசன் கூறியுள்ளதாவது: கோடை விடுமுறையைய... மேலும் பார்க்க