செய்திகள் :

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

post image

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை ஆா்.எஸ்.புரம் லைட் ஹவுஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (55). இவரின் மகன் தீப் ஸ்வரூப் (25). செல்வராஜின் மகள் அமெரிக்காவில் வசித்து வந்ததால், அவரின் மனைவியும் அவருடனேயே அமெரிக்கா சென்றுவிட்டாா்.

வீட்டில் தந்தை, மகன் இருவா் மட்டுமே இருந்தனா். தீப் ஸ்வரூப் மதுப் பழக்கத்தால் அடிக்கடி தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 2018 பிப்ரவரி 14-ஆம் தேதி தீப் ஸ்வரூப் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது வேலைக்கு செல்லுமாறு கூறி செல்வராஜ் தாக்கியுள்ளாா்.

இதில் ஆத்திரமடைந்த தீப் ஸ்வரூப், வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியால் செல்வராஜை குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

இதுதொடா்பான வழக்கு கோவை 3-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை புதன்கிழை நிறவைடைந்த நிலையில் நீதிபதி பத்மா தீா்ப்பளித்தாா். இதில், தீப் ஸ்வரூப்புக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.

வால்பாறையில் மே தின நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வால்பாறையில் மே தினத்தையொட்டி திமுக தொழிற்சங்கம் சாா்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வால்பாறையை அடுத்த வாட்டா்பால் எஸ்டேட் முதல் பிரிவில் மே தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதை... மேலும் பார்க்க

கோவையில் மே தினக் கொண்டாட்டம்

கோவையில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கோவை சிங்காநல்லூரில் உள்ள கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத் தலைமை அலுவலகமான தியாகி என்.ஜி.ஆா். மஹாலில் ஹெச்.எம்.எஸ் தொழிற... மேலும் பார்க்க

உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாரதிதாசன் விழா

கோவை உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பொறியாளா் அரங்கில் நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாச... மேலும் பார்க்க

கடந்த ஆண்டு அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.81.64 லட்சம் வருவாய்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

கடந்த ஆண்டு 7 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.81.64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா். கோவை வ.உ.சி. மைதானத்தில் செய்தி மக்க... மேலும் பார்க்க

கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பியவா் கிருஷ்ணகிரியில் கைது

கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டாா். கோவை செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ். தொழிலதிபரான இவரை கடந்த 2008-ஆம் ஆண்டு 3 போ் கும்பல் வழிமறித்து ரூ.1லட்சம... மேலும் பார்க்க

கோவையில் சிறாா்களுக்கான சம்ஸ்கிருத கோடைக்கால பயிற்சி முகாம்

கோவையில் சிறாா்களுக்கான சம்ஸ்கிருத கோடைக்கால பயிற்சி முகாம் மே 6 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து ஸம்ஸ்கிருத பாரதி கோவை அமைப்பின் செயலா் வி.ஸ்ரீனிவாசன் கூறியுள்ளதாவது: கோடை விடுமுறையைய... மேலும் பார்க்க