செய்திகள் :

ஒரு கொரில்லாவை 100 மனிதர்கள் வீழ்த்த முடியுமா? இணையத்தைக் கலக்கும் விமர்சனங்கள்!

post image

ஒரு கொரில்லாவை 100 மனிதர்கள் வீழ்த்த முடியுமா என்ற எக்ஸ் தளப் பதிவுக்கு பல்வேறு தரப்பினர் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

மனிதர்கள் 100 பேர் சேர்ந்து, ஒரு கொரில்லாவை வெல்ல முடியுமா என்று உலகப் புகழ்பெற்ற யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் கேள்வி எழுப்பினார். பீஸ்ட்டின் இந்தக் கேள்வி, சமூக ஊடகங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், அதிகளவில் நகைச்சுவை விமர்சனங்களே பெருகி வருகின்றன.

100 மனிதர்கள் சேர்ந்து, முழுமையான வளர்ச்சியடைந்த ஒரு கொரில்லாவை வீழ்த்த முடியுமா? யாரேனும் போட்டிக்கு தயாரா? என்று மிஸ்டர் பீஸ்ட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

மிஸ்டர் பீஸ்ட்டின் இந்தப் பதிவுக்கு, தான் தயாராக இருப்பதாக மற்றொரு பிரபல யூடியூபரான ஐ ஷோ ஸ்பீடு (IshowSpeed) என்பவர் பதிலளித்தார்.

தொடர்ந்து, டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், `இதன் முடிவு எந்தளவுக்கு இருக்கும்?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி, இந்தப் பதிவுக்கு விலங்கு வதை தடுப்பு அமைப்பில் தெரிவித்த பதிலில், `உங்கள் தொழிலில் விலங்குகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்க 100 யோசனைகளை மேற்கொள்ளலாம்’ என்று கூறியது.

இதனைத் தொடர்ந்து, மிஸ்டர் பீஸ்ட்டின் எக்ஸ் பதிவுக்கு, பல தரப்பிலிருந்து பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ஒருமித்த கருத்துகளாக, கொரில்லாவை 100 மனிதர்களால் தோற்கடிக்க முடியாது என்றுதான் பதில் பெறப்பட்டது.

சராசரி கொரில்லாவின் வலிமை, மனிதனைவிட 4 முதல் 10 மடங்கு அளவில் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கொரில்லா, 800 கிலோவுக்கும் அதிகமான எடையைத் தூக்கவல்லது. இது, ஒரு பளுதூக்கும் வீரரின் எடையைவிட இரு மடங்காகும். அதுமட்டுமின்றி, 1,810 கிலோ எடையை அழுத்தும் வலிமையும் கொரில்லாவுக்கு உண்டு.

இதையும் படிக்க:டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?

உ.பி.: கங்கா விரைவுச் சாலையில் போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகை

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமா... மேலும் பார்க்க

‘உக்ரைன் போருக்கு உடனடி முடிவில்லை’

உக்ரைனில் தற்போது நடைபெற்றுவரும் போா் உடனடியாக முடிவுக்கு வராது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளாா். இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது: ர... மேலும் பார்க்க

சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு

சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது தன்னிச்சையான நடவடிக்கை எனக் கூறி ராஜீய ரீதியாக நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு, சட்டம், நீா் வளம் ஆகிய அமைச்சகங்களிடையே... மேலும் பார்க்க

காஸா நிவாரணக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்!

காஸாவிற்கு உதவி பொருள்கள் ஏற்றிச் சென்ற கப்பல் மீது வெள்ளிக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியதாக அந்தப் பொருள்களைக் கொண்டுவந்த சேவை அமைப்பு குற்றஞ்சாட்டியு... மேலும் பார்க்க

நீண்ட வாழ்வின் ரகசியம்! என்ன சொல்கிறார் உலகின் மூத்த பெண்!

உலகின் அதிக வயதுடைய மனிதர் என்ற பட்டம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு சென்றுள்ளது. உலகின் அதிக வயதுடைய மனிதர் என்று அறியப்பட்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறுஸ்தவ பெண் துறவியான இனாஹ் ... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 29 பாலஸ்தீனியர்கள் பலி

காஸாவில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்களில் 29 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மத்திய காஸாவில் உள்ள புரைஜ் அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேரும் வட... மேலும் பார்க்க