செய்திகள் :

Retro: ``சித்தா பாட்டு கேட்டு என் மகளை நினைச்சு அழுதேன்'' - எமோஷனலான சூர்யா!

post image

சூர்யாவின் Retro திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களி வரவேற்பைப் பெற்றுவருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, கருணாகரன், நாசர், ஸ்வாசிகா, பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை முன்னிட்டு யூடியூபில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் உரையாடும் வீடியோவெளியிடப்பட்டது.

Santhosh Narayanan
Santhosh Narayanan

அதில் சந்தோஷ் நாராயணன் இசை பற்றி பேசிய சூர்யா, சித்தா படத்தில் வரும் பாடலைக் கேட்டு கண்ணீர் சிந்திய நினைவைப் பகிர்ந்துள்ளார்.

சூர்யா, "வாழ்க்கையில் நம்முடன் கனக்ட் ஆகும் பாடல்கள் எப்போதும் நம்முடன் இருக்கும். என் உணர்வுகளை இன்னும் உண்மையானதாக மாற்றும்.

இப்போது என் மகள் அமெரிக்காவுக்குப் படிக்கப்போவதால் அடிக்கடி சித்தா பாட்டுதான் கேட்கிறேன். அந்தப் பாடலைக் கேட்கும்போது தாரதாரையாக அழுகை வருகிறது" என்றார்.

"ஒருநாள் 3 மணிக்கு நாம் நைட் ஷூட்டிங்கில் இருக்கும்போது என் மகள் எனக்கு மெஸ்ஸேஜ் அனுப்பியிருந்தார். அமெரிக்கா செல்வது பற்றி, அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்போது நான் தற்செயலாக அந்த பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன் என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவு அழுகை வரத் தொடங்கியது."

Retro

"நான் முன்னரே அந்த பாடலைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் (சந்தோஷ் நாராயணன்) சித்தார்த் பாடுவதை நேரில் கேட்டிருக்கிறேன். ஆனால் உண்மையான எமோஷனோடு கலந்த பிறகு, இனி அந்த பாடலை எங்கு கேட்டாலும் எனக்கு அந்த நாள்தான் நினைவுக்கு வரும்." என்றார்.

சித்தா பாடல் குறித்து சந்தோஷ், "அந்த படம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் ஒரு கிஃப்டாக இந்த பாடலை பண்ணிக்கொடுத்தேன்.

'நீங்க படத்தில் முடிந்தால் வைங்க இல்லைன்னா சும்மார் ரிலீஸ் செய்ங்க' என சொல்லிதான் கொடுத்தேன்." என்றார்.

Kingdom: `இந்த மேதை யாரென..' - அனிருத்துக்கு காதல் கடிதம் எழுதிய விஜய் தேவரகொண்டா!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியிருக்கும் 'கிங்டம்' திரைப்படம் இம்மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 'ஜெர்சி' பட இயக்குநர் கெளதம் டின்னனூரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அன... மேலும் பார்க்க

Retro: ``கார்த்திக் சுப்புராஜ் அது மாதிரி கதை வெச்சிருக்காரு; அதை தான் முதல்ல சொன்னாரு!'' - சூர்யா

சூர்யா நடித்திருக்கும் 'ரெட்ரோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'Love, Laughter, War' என்ற மூன்று பகுதிகளிலும் சூர்யா தனது நடிப்பால் மிளிர்ந்திருக்கிறார். அதேபோல், பூஜா ஹெக்டே தனது 'ருக்மண... மேலும் பார்க்க

``கட்டிட விழா நடந்தால் தான் எனக்கு திருமணம்; அதற்கு 9 வருடங்கள் ஆகிவிட்டது, ஒரு வழியா..'' - விஷால்

ஆகஸ்ட் 15ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும் என சங்கத்தின் செயலாளரும் நடிகருமான விஷால் தெரிவித்திருக்கிறார்.பெப்சி அமைப்பு தொழிலாளர் தினத்தை (மே 1) நேற்று கொண்டாடி இருக்கின்றனர். இதில் நடிகர் ... மேலும் பார்க்க

Ajith: ``ஒரு குற்றவுணர்ச்சியால் தான் `நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தேன்!'' - அஜித் ஓப்பன் டாக்

அஜித் நடித்திருந்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. கடந்த திங்கட்கிழமை ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவரிடமிருந்து அஜித் பத்ம பூஷன் விருதைப் பெற்றார். இதைத் தொடர்ந்து பல ஊடக... மேலும் பார்க்க

`பஞ்சதந்திரம் படத்த பார்த்திட்டுதான் தூங்குவேனு ராணுவ வீரர் சொன்னாரு' - கிரேஸி மோகன் பற்றி ஜெயராம்

தமிழ் நாடக மற்றும் திரைப்பட உலகில் தனது நகைச்சுவை வசனங்களுக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதற்கும் புகழ்பெற்றவர் கிரேஸி மோகன்.மறைந்த நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் எழுதிய '... மேலும் பார்க்க

Ajith Kumar: ``கடனை அடைப்பதற்குதான் சினிமாவிற்கு வந்தேன்!'' - பகிர்கிறார் அஜித்

கடந்த திங்கட்கிழமை நடிகர் அஜித் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் விருதைப் பெற்றார். விருது பெற்ற கையோடு இந்திய ஊடகங்கள் சிலவற்றுக்கு பேட்டிகள் கொடுத்திருக்கிறார... மேலும் பார்க்க