செய்திகள் :

மழை, புயலுக்கு மூவர் பலி: உ.பி.யில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

post image

உத்தரப் பிரதேசத்தில் மழை, புயலால் 3 பேர் உயிரிழந்ததாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாகவும், மின்னல் தாக்கியும் 17 வயது சிறுமி உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். இறந்தவர்களில் ஃபிரோசாபாத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலைத் திட்டத்தில் பணிபுரியும் 2 தொழிலாளர்களும் அடங்குவர். மழையிலிருந்து பாதுகாக்க வைக்கோல் அடுக்கிவைத்திருப்பதை மூட முயன்ற ஒரு குடும்பமும் மழையில் சிக்கி காயமடைந்தது.

இதற்கிடையில் இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு நாள்களுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் மழை, இடியுடன் கூடிய மழையும், மணிக்கு 25-35 கிமீ வேகத்தில் பலத்த காற்றும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் கணித்துள்ளது.

வானிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவும், பயிர்கள், கால்நடைகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடவும், மின்னல் தாக்குதல்கள், மழை தொடர்பான விபத்துகள், புயல் சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யவும் மாவட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பயிர் சேத இழப்பீட்டிற்காக நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய வகையில் சேத மதிப்பின் அறிக்கைகளை உடனடியாக மாநில அரசிடம் சமர்ப்பிக்குமாறும், நீர் தேங்கியுள்ள நகர்ப்புற மற்றும் தாழ்வான பகுதிகளில், வடிகால் முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

பாகிஸ்தானுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை: காங்கிரஸ் வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல மத்திய ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு புதிய மனு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. தேவைப்பட்டால், இந்... மேலும் பார்க்க

ஜெய்ப்பூர்: மனைவியை கொலை செய்து உடலை குப்பைக் கிடங்கில் மறைத்து வைத்த நபர் கைது

ஜெய்ப்பூரில் மனைவியை கொலை செய்து உடலை குப்பைக் கிடங்கில் மறைத்து வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், விஸ்வகர்மா தொழில்துறை பகுதியில் ஷாஹித் குரேஷி(37) தனது மனைவி ஃபர்ஹீன் குரேஷியை(2... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 15 வெளிநாட்டவர் கைது! நாடுகடத்த நடவடிக்கை!

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வசித்து வந்த வெளிநாட்டவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.புது தில்லியின் துவாரகா பகுதியில், சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வசித்து வந்த வெளிநாட்டவர்கள் 15 பேர்... மேலும் பார்க்க

ஹரியாணா: தனியார் நகை கடன் வங்கியின் பூட்டை உடைத்து 7 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் கொள்ளை

ஹரியாணாவில் தனியார் நகை கடன் வங்கியில் 7 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். ஹரியாணா மாநிலம், பரசுராம் சௌக்கில் தனியார் நகை கடன் வங்கி இயங்கி வருகிறது. வியாழக்கிழ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கான உலகளாவிய நிதியை முடக்கும் இந்தியா?

பாகிஸ்தானுக்கு உலகளாவிய நிறுவனங்கள் அளிக்கும் நிதியுதவியை மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட மற்றும் வழங்கப்படவிருக்கும் நிதி மற்றும் கடன்... மேலும் பார்க்க