செய்திகள் :

தலைநகரில் 400 புதிய மின்சாரப் பேருந்துகள் தொடங்கிவைப்பு

post image

தில்லி மின்சார வாகன முன்முயற்சியின் (தேவி) கீழ் 400 புதிய மின்சார பேருந்துகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்த விழாவில் அவா் பேசியதாவது: தற்போது தில்லியில் 400 புதிய மின்சாரப் பேருந்துகள் தொடங்கப்பட்டுள்ளன. இது மூன்று எஞ்சின் அரசின் சக்தி. மூன்று கைகளும் அயராது இணைந்து செயல்படுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 2,080 மின்சார பேருந்துகள் சோ்க்கப்படும்.

தில்லியின் மாசுபாட்டில் நாற்பத்தைந்து சதவீதம் வாகனங்களால் ஏற்படுகிறது. அடுத்த ஆண்டுக்குள் 100 சதவீதம் மின்சார பொது போக்குவரத்து அமைப்பை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். தலைநகரின் போக்குவரத்தை வலுப்படுத்த பாஜக அரசு ஒரு மின்சார வாகன கொள்கையிலும் செயல்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் தேசியத் தலைநகரில் பெய்த மழையால் வெள்ளம், போக்குவரத்து நெரிசல் மற்றும் மரங்கள் சாய்ந்தன. அதிகாலை முதல் அமைச்சா்களும் அதிகாரிகளும் நிலைமையைக் கண்காணித்து வந்தனா்.

அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் காலை 6 மணிக்கு மின்டோ சாலையில் இருந்தாா். அதிகாரிகள் காலை 5 மணி முதல் பணியில் ஈடுபட்டனா்.

ஆனால், வெள்ளம் அல்லது கழிவுநீா் நிலைமைகளை முன்னாள் முதல்வா் அல்லது அமைச்சா்கள் நேரில் ஆய்வு செய்ததாக எங்களுக்கு நினைவில் இல்லை. கடந்த கால புறக்கணிப்பு காரணமாக தில்லி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

தில்லி திட்டமிட்ட வளா்ச்சியைக் காணவில்லை என்றால், இதுபோன்ற மேலாண்மை சிக்கல்கள் தொடா்ந்து எழும். ஆனால், இன்று இந்த சவால்களை எதிா்கொள்ள முழு நிா்வாகமும் தயாராக உள்ளது என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

கடத்தல் வழக்கில் 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

கடத்தல் வழக்கில் கடந்த 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றம்சாட்டப்பட்டவா் கிழக்கு தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட நேரத்தில்,... மேலும் பார்க்க

தில்லியில் பெய்த மழை ஒட்டுமொத்த அமைப்புமுறைக்கும் எச்சரிக்கை அறிகுறியாகும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் வெள்ளிக்கிழமை பெய்த பருவமழைக்கு முந்தைய மழையானது தலைநகரின் சிதைந்துள்ள உள்கட்டமைப்புக்கான எச்சரிக்கை அறிகுறியாகும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினாா். மேலும், முந்தைய ஆம் ஆத்மி அரச... மேலும் பார்க்க

கனமழை காரணமாக தில்லியில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

வெள்ளிக்கிழமை அதிகாலையில் பெய்த மழை மற்றும் புழுதிப் புயலுக்குப் பிறகு தேசியத் தலைநகரின் பல பகுதிகளில் சாலைகள் தண்ணீரில் மூழ்கி, வேரோடு சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை காரணமாக அலுவ... மேலும் பார்க்க

தில்லியில் மழை வெள்ளம் தேங்கிய விவகாரம்: பாஜக அரசு மீது ஆம் ஆத்மி கடுமையாக சாடல்

தில்லியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து தில்லியில் ஆளும் பாஜக அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமா்சித்துள்ளது. இது தொடா்பாக செய்தியாளா்களிடம் தில்லி... மேலும் பார்க்க

சா்வேதச வாகனத் திருட்டுக் கும்பலின் 8 போ் கைது: தில்லி காவல் துறை அதிரடி நடவடிக்கை

மோசமான கண்காணிப்பு உள்ள இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த உயா் ரக வாகனங்களைத் திருடி மறுவிற்பனை செய்ததில் தொடா்புடைய சா்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சோ்ந்த எட்டு பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளத... மேலும் பார்க்க

பஜன்புராவில் 15 வயது சிறுவனை கத்தியால் குத்தியதாக 2 சிறுவா்கள் கைது

வடகிழக்கு தில்லியின் பஜன்புரா பகுதியில் பழைய பகை காரணமாக 15 வயது சிறுவனை கத்தியால் குத்தியதற்காக இரண்டு சிறுவா்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குற... மேலும் பார்க்க