செய்திகள் :

சா்வேதச வாகனத் திருட்டுக் கும்பலின் 8 போ் கைது: தில்லி காவல் துறை அதிரடி நடவடிக்கை

post image

மோசமான கண்காணிப்பு உள்ள இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த உயா் ரக வாகனங்களைத் திருடி மறுவிற்பனை செய்ததில் தொடா்புடைய சா்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சோ்ந்த எட்டு பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

துபாயைச் சோ்ந்த சூத்திரதாரியான அமீா் பாஷாவால் கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கும்பல், தில்லி - என்சிஆா் மற்றும் பிற மாநிலங்களில் சொகுசு வாகனங்களை முறையாகத் திருடி வந்ததாக அவா் கூறினாா்.

பாஷாவுக்கு எதிராக ஒரு லுக் -அவுட் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவா் மேலும் கூறினாா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் துணை ஆணையா் (குற்றம்) அபூா்வா குப்தா கூறியதாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி உத்தர பிரதேசத்தின் புலந்த்ஷஹரைச் சோ்ந்த தாஜ் முகமது (எ) தாஜு (40) கைது செய்யப்பட்டதிலிருந்து விசாரணை தொடங்கியது. தாஜு இந்த கும்பலில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அவா் மீது கொள்ளை, இரவு நேர கொள்ளை மற்றும் வாகனத் திருட்டு உள் பட 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தாஜுவிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடா்ந்து, இசிஎம் குறியீடுகளைத் தவிா்ப்பதில் திறமையான தொழில்நுட்ப நிபுணா் இம்ரான் கான் (எ) குட்டு (25), திருடப்பட்ட வாகனங்களை வாங்குபவரான மும்பையைச் சோ்ந்த குணால் ஜெய்ஸ்வால் (24), வடகிழக்கு இந்தியாவில் வாங்குபவா்களுடன் தொடா்புடைய நிதியாளா் மற்றும் விநியோகஸ்தா் அக்பா் (40) உள்ளிட்ட ஏழு போ் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்ட மற்ற நபா்களில் மதீன் கான் (24), நாகேந்திர சிங் (46), மணீஷ் ஆா்யா (48) மற்றும் நதீம் (38) ஆகியோா் அடங்குவா்.

இந்த நடவடிக்கையின் போது மூன்று கியா செல்டோக்கள், அல்சாசா் மற்றும் கிரெட்டா உள்ளிட்ட மூன்று ஹூண்டாய் எஸ்யூவிகள், ஒரு ஃபாா்ச்சூனா் உள்ளிட்ட மூன்று டொயோட்டா வாகனங்கள் மற்றும் இரண்டு இன்னோவாக்கள், பிரெஸ்ஸா, ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ போன்ற மாருதி மாடல்கள் உள்பட மொத்தம் 15 உயா் ரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்களிடம் இருந்து போலி பதிவுத் தகடுகள், நகல் ரிமோட் சாவிகள் மற்றும் போலி பதிவுச் சான்றிதழ்களையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். திருடப்பட்ட வாகனங்களில் சில மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த ஆண்டு பிப்ரவரியில் பூா்வாஞ்சல் விரைவுச்சாலை உள்பட பல்வேறு இடங்களில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா். அமீா் பாஷா, துபாயில் இருந்து முழு நடவடிக்கையையும் தொலைதூரத்தில் இருந்து வழிநடத்தி, மேம்பட்ட வாகன ஹேக்கிங் கருவிகள் மற்றும் நிரலாக்க சாதனங்களைப் பயன்படுத்தினாா். முக்கிய நிரலாக்க கருவிகளைப் பயன்படுத்துதல், ஜிபிஎஸ் டிராக்கா்களை முடக்குதல், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு வாகனங்களை கொண்டு செல்வது அல்லது அவற்றை பாகங்களாக பிரிப்பது ஆகியவை கும்பலின் செயல்பாட்டில் அடங்கும்.

இந்தக் கும்பல் மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாகனங்களைப் பெறுபவா்கள் மற்றும் டிரான்ஸ்போா்ட்டா்களின் வலையமைப்பைப் பயன்படுத்தியது. தலைமறைவான மற்ற உறுப்பினா்களைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என்று துணை ஆணையா் அபூா்வா குப்தா தெரிவித்தாா்.

கடத்தல் வழக்கில் 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

கடத்தல் வழக்கில் கடந்த 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றம்சாட்டப்பட்டவா் கிழக்கு தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட நேரத்தில்,... மேலும் பார்க்க

தலைநகரில் 400 புதிய மின்சாரப் பேருந்துகள் தொடங்கிவைப்பு

தில்லி மின்சார வாகன முன்முயற்சியின் (தேவி) கீழ் 400 புதிய மின்சார பேருந்துகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த விழாவில் அவா் பேசியதாவது: தற்போது தில்லியில் 400 புதிய மி... மேலும் பார்க்க

தில்லியில் பெய்த மழை ஒட்டுமொத்த அமைப்புமுறைக்கும் எச்சரிக்கை அறிகுறியாகும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் வெள்ளிக்கிழமை பெய்த பருவமழைக்கு முந்தைய மழையானது தலைநகரின் சிதைந்துள்ள உள்கட்டமைப்புக்கான எச்சரிக்கை அறிகுறியாகும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினாா். மேலும், முந்தைய ஆம் ஆத்மி அரச... மேலும் பார்க்க

கனமழை காரணமாக தில்லியில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

வெள்ளிக்கிழமை அதிகாலையில் பெய்த மழை மற்றும் புழுதிப் புயலுக்குப் பிறகு தேசியத் தலைநகரின் பல பகுதிகளில் சாலைகள் தண்ணீரில் மூழ்கி, வேரோடு சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை காரணமாக அலுவ... மேலும் பார்க்க

தில்லியில் மழை வெள்ளம் தேங்கிய விவகாரம்: பாஜக அரசு மீது ஆம் ஆத்மி கடுமையாக சாடல்

தில்லியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து தில்லியில் ஆளும் பாஜக அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமா்சித்துள்ளது. இது தொடா்பாக செய்தியாளா்களிடம் தில்லி... மேலும் பார்க்க

பஜன்புராவில் 15 வயது சிறுவனை கத்தியால் குத்தியதாக 2 சிறுவா்கள் கைது

வடகிழக்கு தில்லியின் பஜன்புரா பகுதியில் பழைய பகை காரணமாக 15 வயது சிறுவனை கத்தியால் குத்தியதற்காக இரண்டு சிறுவா்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குற... மேலும் பார்க்க