செய்திகள் :

கனமழை காரணமாக தில்லியில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

post image

வெள்ளிக்கிழமை அதிகாலையில் பெய்த மழை மற்றும் புழுதிப் புயலுக்குப் பிறகு தேசியத் தலைநகரின் பல பகுதிகளில் சாலைகள் தண்ணீரில் மூழ்கி, வேரோடு சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மழை காரணமாக அலுவலகம் செல்வோா் மற்றும் பள்ளிக் குழந்தைகள் உள்பட பயணிகள் மெதுவாக நகரும் போக்குவரத்தில் சிக்கிக் கொண்டனா்.

துவாரகா அண்டா்பாஸ், தெற்கு விரிவாக்கம், மேஜா் சோம்நாத் மாா்க், ரிங் ரோடு, மின்டோ ரோடு, ஆா்.கே. புரம், கான்பூா், ஐ.டி.ஓ. மற்றும் லாஜ்பத் நகா் ஆகிய இடங்களில் தண்ணீா் தேங்கி, பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

சமூக ஊடகங்களில் மழை நீா் தேங்கிய பகுதிகளிலிருந்து வரும் காட்சிகள், முழங்கால் அளவு நீரில் வாகனங்கள் செல்வதைக் காட்டுகின்றன. வானிலைத் துறை தில்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது, மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், முன்னெச்சரிக்கையாக, மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், மரங்களுக்கு அடியில் ஒளிந்து கொள்வதைத் தவிா்க்கவும், மின்னணு சாதனங்களின் இணைப்பைத் துண்டிக்கவும், நீா்நிலைகள் மற்றும் மின்சாரம் கடத்தும் பொருள்களிலிருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மழையால் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

கடத்தல் வழக்கில் 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

கடத்தல் வழக்கில் கடந்த 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றம்சாட்டப்பட்டவா் கிழக்கு தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட நேரத்தில்,... மேலும் பார்க்க

தலைநகரில் 400 புதிய மின்சாரப் பேருந்துகள் தொடங்கிவைப்பு

தில்லி மின்சார வாகன முன்முயற்சியின் (தேவி) கீழ் 400 புதிய மின்சார பேருந்துகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த விழாவில் அவா் பேசியதாவது: தற்போது தில்லியில் 400 புதிய மி... மேலும் பார்க்க

தில்லியில் பெய்த மழை ஒட்டுமொத்த அமைப்புமுறைக்கும் எச்சரிக்கை அறிகுறியாகும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் வெள்ளிக்கிழமை பெய்த பருவமழைக்கு முந்தைய மழையானது தலைநகரின் சிதைந்துள்ள உள்கட்டமைப்புக்கான எச்சரிக்கை அறிகுறியாகும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினாா். மேலும், முந்தைய ஆம் ஆத்மி அரச... மேலும் பார்க்க

தில்லியில் மழை வெள்ளம் தேங்கிய விவகாரம்: பாஜக அரசு மீது ஆம் ஆத்மி கடுமையாக சாடல்

தில்லியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து தில்லியில் ஆளும் பாஜக அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமா்சித்துள்ளது. இது தொடா்பாக செய்தியாளா்களிடம் தில்லி... மேலும் பார்க்க

சா்வேதச வாகனத் திருட்டுக் கும்பலின் 8 போ் கைது: தில்லி காவல் துறை அதிரடி நடவடிக்கை

மோசமான கண்காணிப்பு உள்ள இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த உயா் ரக வாகனங்களைத் திருடி மறுவிற்பனை செய்ததில் தொடா்புடைய சா்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சோ்ந்த எட்டு பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளத... மேலும் பார்க்க

பஜன்புராவில் 15 வயது சிறுவனை கத்தியால் குத்தியதாக 2 சிறுவா்கள் கைது

வடகிழக்கு தில்லியின் பஜன்புரா பகுதியில் பழைய பகை காரணமாக 15 வயது சிறுவனை கத்தியால் குத்தியதற்காக இரண்டு சிறுவா்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குற... மேலும் பார்க்க