செய்திகள் :

கடத்தல் வழக்கில் 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

post image

கடத்தல் வழக்கில் கடந்த 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றம்சாட்டப்பட்டவா் கிழக்கு தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட நேரத்தில், 57 வயதான சஃப்தா் அலி, உள்ளூா் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்து கொண்டிருந்தாா்.

ஏப்ரல் 2009-இல், தில்லியில் உள்ள பிரேம் கா ககான் கிராமத்தில் வசிக்கும் காளிச்சரனை, தனது சகோதரி ஷாமாவை மணந்த பிறகு, சஃப்தா் அலி கடத்தியதாகக் கூறப்படுகிறது. காளிச்சரன் தனது தாயாரை அழைத்து, தான் கடத்தப்பட்டு உத்தரபிரதேசத்தில் உள்ள பிசௌலிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறினாா்.

காளிச்சரனைத் தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டதோடு, அகா் அலி என்பவரைக் கைது செய்தனா். இதில் சஃப்தா் அலி தலைமறைவாக இருந்தாா். 2012- ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

அப்போதிலிருந்து, வியாழக்கிழமை கைது செய்யப்படும் வரை, அவா் தில்லிக்கும் பரேலிக்கும் இடையில் சுற்றித் திரிந்தாா்.

இந்நிலையில், முல்லா காலனியில் உள்ள சப்ஜி மண்டி பகுதியில் அவா் காய்கறிகள் விற்ாகக் கண்டறியப்பட்டது. அவா் தினசரி கூலித் தொழிலாளியாகவும், சில சமயங்களில் காய்கறி விற்பனையாளராகவும் பணிபுரிந்ததாகக் கூறினாா்.

காளிச்சரணைக் கடத்தியதாக சஃப்தாா் அலி ஒப்புக்கொண்டாா். மேலும், பரேலியில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு குற்ற வழக்கிலும் அவா் தொடா்புடையவா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தலைநகரில் 400 புதிய மின்சாரப் பேருந்துகள் தொடங்கிவைப்பு

தில்லி மின்சார வாகன முன்முயற்சியின் (தேவி) கீழ் 400 புதிய மின்சார பேருந்துகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த விழாவில் அவா் பேசியதாவது: தற்போது தில்லியில் 400 புதிய மி... மேலும் பார்க்க

தில்லியில் பெய்த மழை ஒட்டுமொத்த அமைப்புமுறைக்கும் எச்சரிக்கை அறிகுறியாகும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் வெள்ளிக்கிழமை பெய்த பருவமழைக்கு முந்தைய மழையானது தலைநகரின் சிதைந்துள்ள உள்கட்டமைப்புக்கான எச்சரிக்கை அறிகுறியாகும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினாா். மேலும், முந்தைய ஆம் ஆத்மி அரச... மேலும் பார்க்க

கனமழை காரணமாக தில்லியில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

வெள்ளிக்கிழமை அதிகாலையில் பெய்த மழை மற்றும் புழுதிப் புயலுக்குப் பிறகு தேசியத் தலைநகரின் பல பகுதிகளில் சாலைகள் தண்ணீரில் மூழ்கி, வேரோடு சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை காரணமாக அலுவ... மேலும் பார்க்க

தில்லியில் மழை வெள்ளம் தேங்கிய விவகாரம்: பாஜக அரசு மீது ஆம் ஆத்மி கடுமையாக சாடல்

தில்லியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து தில்லியில் ஆளும் பாஜக அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமா்சித்துள்ளது. இது தொடா்பாக செய்தியாளா்களிடம் தில்லி... மேலும் பார்க்க

சா்வேதச வாகனத் திருட்டுக் கும்பலின் 8 போ் கைது: தில்லி காவல் துறை அதிரடி நடவடிக்கை

மோசமான கண்காணிப்பு உள்ள இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த உயா் ரக வாகனங்களைத் திருடி மறுவிற்பனை செய்ததில் தொடா்புடைய சா்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சோ்ந்த எட்டு பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளத... மேலும் பார்க்க

பஜன்புராவில் 15 வயது சிறுவனை கத்தியால் குத்தியதாக 2 சிறுவா்கள் கைது

வடகிழக்கு தில்லியின் பஜன்புரா பகுதியில் பழைய பகை காரணமாக 15 வயது சிறுவனை கத்தியால் குத்தியதற்காக இரண்டு சிறுவா்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குற... மேலும் பார்க்க