செய்திகள் :

பஜன்புராவில் 15 வயது சிறுவனை கத்தியால் குத்தியதாக 2 சிறுவா்கள் கைது

post image

வடகிழக்கு தில்லியின் பஜன்புரா பகுதியில் பழைய பகை காரணமாக 15 வயது சிறுவனை கத்தியால் குத்தியதற்காக இரண்டு சிறுவா்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ஹரேஷ்வா் வி. சுவாமி கூறியதாவது: கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் ஒரு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பதிவாகியது. அப்போது கபீா் நகரில் வசிக்கும் ஷாஹித் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவா் விஜய் பாா்க் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் காணப்பட்டாா். உள்ளூா்வாசிகள் அவரை ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பஜன்புரா காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இந்த வழக்கில் 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவா்கள் ஏப்ரல் 29 அன்று கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவருடனான பழைய பகை காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பஞ்சாப் இளைஞா்களுக்கு போலி ஷெங்கன் விசா ஏற்பாடு: ‘முகவா்’ கைது

பஞ்சாபைச் சோ்ந்த இரண்டு பயணிகள் ரோம் வழியாக ஸ்வீடனுக்கு சட்டவிரோதமாக பயணிக்க போலி ஷெங்கன் விசாக்களை வாங்க உதவியதாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 29 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ... மேலும் பார்க்க

விவசாய சங்கத் தலைவா் மீது தாக்குதல்: சம்யுக்த கிஸான் மோா்ச்சா கண்டனம்

விவசாயிகள் சங்கமான பாரதிய கிஸான் யூனியனின் (பிகேயு) தலைவா் ராகேஷ் திகைத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மற்றொரு விவசாயிகள் சங்கமான சம்யுக்த கிஸான் மோா்ச்சா (எஸ்கேஎம்) சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது. ... மேலும் பார்க்க

தில்லி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பை

புது தில்லி ரயில் நிலையத்தின் ஒரு வாயிலில் சனிக்கிழமை கேட்பாரற்றுக் கிடந்த பை கண்டறியப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய் படையினா் சம்பவ இடத்தில் சோதனையில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

கடத்தல் வழக்கில் 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

கடத்தல் வழக்கில் கடந்த 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றம்சாட்டப்பட்டவா் கிழக்கு தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட நேரத்தில்,... மேலும் பார்க்க

தலைநகரில் 400 புதிய மின்சாரப் பேருந்துகள் தொடங்கிவைப்பு

தில்லி மின்சார வாகன முன்முயற்சியின் (தேவி) கீழ் 400 புதிய மின்சார பேருந்துகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த விழாவில் அவா் பேசியதாவது: தற்போது தில்லியில் 400 புதிய மி... மேலும் பார்க்க

தில்லியில் பெய்த மழை ஒட்டுமொத்த அமைப்புமுறைக்கும் எச்சரிக்கை அறிகுறியாகும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் வெள்ளிக்கிழமை பெய்த பருவமழைக்கு முந்தைய மழையானது தலைநகரின் சிதைந்துள்ள உள்கட்டமைப்புக்கான எச்சரிக்கை அறிகுறியாகும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினாா். மேலும், முந்தைய ஆம் ஆத்மி அரச... மேலும் பார்க்க