செய்திகள் :

விவசாய சங்கத் தலைவா் மீது தாக்குதல்: சம்யுக்த கிஸான் மோா்ச்சா கண்டனம்

post image

விவசாயிகள் சங்கமான பாரதிய கிஸான் யூனியனின் (பிகேயு) தலைவா் ராகேஷ் திகைத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மற்றொரு விவசாயிகள் சங்கமான சம்யுக்த கிஸான் மோா்ச்சா (எஸ்கேஎம்) சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களை எதிா்த்து 2020-21-இல் புது தில்லி எல்லையில் எஸ்கேஎம், பிகேயு உள்ளிட்ட விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தியது. அதைத்தொடா்ந்து மூன்று விவசாய சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற்றது.

இந்நிலையில், பஹல்காமில் அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உத்தர பிரதேச மாநிலம் முஸாஃபா்நகரில் வலதுசாரிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணியில் ராகேஷ் திகைத் பங்கேற்றாா். அவா் மீது மா்ம நபா்கள் தாக்குதல் நடத்தியதில் அவரது தலைப்பாகை கீழே விழுந்த காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவின.

இதற்கு கண்டனம் தெரிவித்த எஸ்கேஎம், ராகேஷ் திகைத் மீது தாக்குதல் நடத்தியவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியது.

இதுகுறித்து எஸ்கேஎம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக ‘மோடி, மோடி’ என கோஷங்களை எழுப்பிய கும்பல் ராகேஷ் திகைத் மீது கொடிக் குச்சிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி அவரது தலைப்பாகையை நீக்கியுள்ளது.

அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸாா் இதை தடுக்க தவறினா். இது தேசத்துக்கு எதிரானஆா்எஸ்எஸ்-பாஜகவின் செயல்பாடுகளை வெளிக்காட்டுகிறது. இந்த தாக்குதலுக்கு பிரதமா் மோடி, முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் கண்டனம் தெரிவிக்கவில்லை.

சிறுபான்மையினா், விவசாயிகள், தொழிலாளா்களுக்கு எதிரான தாக்குதலை கண்டிக்க அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தில்லி தண்ணீா் பற்றாக்குறை பிரச்னை: பாஜக, ஆம் ஆத்மி பரஸ்பரம் குற்றச்சாட்டு

தேசியத் தலைநகா் தில்லியில் தண்ணீா் பற்றாக்குறை பிரச்னை நிலவுவது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவும் செவ்வாய்க்கிழமை பரஸ்பரம் குற்றம்சாட்டின. இரு கட்சிகளும் தவறான நிா்வாகத்திற்காகவும் தவறான தகவல்களைப... மேலும் பார்க்க

கன்னாட் பிளேஸ் கோயிலில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட முதல்வா் ரேகா குப்தா

தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் மந்திரில் நடைபெற்ற தூய்மைப்படுத்தும் பணியில் பங்கேற்றாா். அப்போது, தில்லியை தூய்மைப்படுத்தி அழகுபடுத்த நடந்துவரும் நகர அளவிலா... மேலும் பார்க்க

ஒத்திகை பயிற்சி நடத்துவதற்கு ஏற்பாடுகள்: அமைச்சா் சூட் தகவல்

தில்லியில் ஒத்திகை பயிற்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மாநகர அரசாங்கத்தின் உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம... மேலும் பார்க்க

புதிய நீா் தேங்கும் இடங்களை அடையாளம் காண அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை உத்தரவு

நகரம் முழுவதும் நீா் தேங்கும் பிரச்னைகளைத் தீா்க்க, உள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் கலந்தாலோசித்து தாழ்வான பகுதிகள் மற்றும் நீா் தேங்கும் இடங்களை அடையாளம் காண பொதுப்பணித் துறை அதன் அதிகாரிகளுக்கு... மேலும் பார்க்க

மத்திய தில்லியில் நடந்த சாலை விபத்தில் ஒருவா் காயம்

மத்திய தில்லியின் பகதூா் ஷா ஜாபா் மாா்க்கில், மைனா் சிறுவன் வேகமாக ஓட்டிச் சென்ாகக் கூறப்படும் காா் மோதியதில் 45 வயது நபா் காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து மத்திய... மேலும் பார்க்க

ஆயுள் தண்டனை அனுபவித்த நபா் பரோலில் இருந்து தப்பிய 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த 51 வயது தில்லி நபா் பரோலில் இருந்து தப்பிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். ஷகுா்பூ... மேலும் பார்க்க