செய்திகள் :

ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரால் புற்றுநோய் பாதிப்பா? - அமெரிக்க நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

post image

அமெரிக்க நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரைப் பயன்படுத்தி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு $966 மில்லியன் (இந்திய ரூபாயில் சுமார் 85,790 கோடி ரூபாய்) வழங்க J&J நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது அமெரிக்க நீதிமன்றம்.

அமெரிக்காவைச் சேர்ந்த மைய் மூர் (Mae Moore) என்ற 88 வயதான மூதாட்டி, மீசோதெலியோமா (Mesothelioma) என்ற அரியவகை புற்றுநோயால் கடந்த 2021ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அவர் நீண்ட காலமாகவே ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரைப் பயன்படுத்தும் பழக்கமுடையவர்.

அவரது உயிரிழப்பிற்குக் காரணம், தொடர்ச்சியாக நச்சுத்தன்மை கொண்ட பவுடரைப் பயன்படுத்தியதுதான் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

ஜான்சன் & ஜான்சன் Johnson & Johnson
ஜான்சன் & ஜான்சன் Johnson & Johnson

நச்சுத்தன்மை கொண்ட வாசனையை அல்லது நச்சுத்தன்மை கொண்ட பவுடர்களைத் தொடர்ச்சியாக சுவாசிப்பதால் நுரையீரல், மார்பகம், வயிறு, இதயம் போன்ற பகுதிகளில் மீசோதெலியோமா என்ற அரியவகை புற்றுநோய் ஏற்படுகிறதாம்.

ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரை நீண்ட காலம் பயன்படுத்திய மை மூர் என்பவருக்கும் இப்படித்தான் இந்த மீசோதெலியோமா புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரைப் பயன்படுத்தியதால்தான் மைய் மூர் உயிரிழந்தார் என குற்றம்சாட்டி அவரது குடும்பத்தினர், 2021ம் ஆண்டே கலிபோர்னியாவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனதிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர்.

Johnson & Johnson
Johnson & Johnson

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் தற்போது ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், இறந்த மூரின் குடும்பத்திற்கு $966 மில்லியன் (இந்திய ரூபாயில் சுமார் 85,790 கோடி ரூபாய்) வழங்க J&J நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதில் $16 மில்லியன் (சுமார் 14 கோடி ரூபாய்) இழப்பீடாகவும், $950 மில்லியன் (சுமார் 84,000 கோடி ரூபாய்) தண்டனைத் தொகையாகவும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

J&J நிறுவனம் தற்போதும் இந்த தீரப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளது.

'திண்டுக்கல்லில் சில பணிகளில் தொய்வு இருக்கிறது' - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 52 துறை அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் ... மேலும் பார்க்க

`அவிநாசி சாலை To ஜி.டி நாயுடு மேம்பாலம்' - 18 Years போட்டோ ரீவைண்ட்!!

அவிநாசி சாலைஅவிநாசி சாலைஅவிநாசி சாலைஅவிநாசி சாலைஅவிநாசி சாலைஅவிநாசி சாலைஅவிநாசி சாலைஅவிநாசி சாலைஅவிநாசி சாலைஅவிநாசி சாலைமேம்பாலம் கட்டுமான பணிகள் அவிநாசி சாலைஅவிநாசி சாலைமேம்பாலம் கட்டுமான பணிகள் மேம்... மேலும் பார்க்க

``அமித் ஷாவிடம் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' - மம்தா பானர்ஜி சொல்வதென்ன?

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் பெய்த கனமழையால் வடக்கு வங்காளம் பெரிதாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்வையிட்டுவிட்டு கொல்கத்தா திரும்பிய முதல்வர் மம்தா பானர்ஜி, செய்தியாளர் சந்திப்பில் 'அமித் ஷா... மேலும் பார்க்க

Coldrif இருமல் மருந்து: 20 குழந்தைகள் உயிரிழப்பு - கோல்ட்ரிஃப் நிறுவனத்தின் உரிமையாளர் கைது

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் 20 குழந்தைகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை... மேலும் பார்க்க

"2014-ல் நான் கண்ட கனவு இதுதான்" - பிரதமர் மோடியின் உரை

மராட்டிய மாநிலம், நவிமும்பையில் ரூ.19650 கோடி செலவில் தாமரை வடிவில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதையடுத்துப் பேசிய பிரதமர் மோடி, "ஹவாய் செருப்புப் போடும் சாதாரண ம... மேலும் பார்க்க

'zoho mail'க்கு மாறிய அமித் ஷா; என்ன ஸ்பெஷல், என்னனென்ன வசதி இருக்கின்றன?!

பாஜக-வைச் சேர்ந்த உள்துறை அமித் ஷா 'ZOHO' நிறுவனத்தின் 'zoho mail'க்கு மாறியுள்ளதாகக் கூறியிருக்கிறார். இதன் பின்னணி என்ன? அதில் அப்படி என்ன ஸ்பெஷல் என்பது குறித்து பார்க்கலாம். பின்னணிட்ரம்ப் தலைமையி... மேலும் பார்க்க