செய்திகள் :

ஜார்க்கண்ட்: பள்ளிக்கூடத்தில் மின்னல் பாய்ந்து 9 மாணவர்கள் படுகாயம்!

post image

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீது மின்னல் பாய்ந்து 9 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கோடெர்மா மாவட்டத்தின் லால்காபானி கிராமத்திலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் இன்று (ஏப்.9) மதியம் வகுப்பு நடந்துக்கொண்டிருந்த போது அந்தக் கட்டடத்தின் மீது மின்னல் பாய்ந்ததில் 9 மாணவர்கள் காயமடைந்ததுள்ளனர்.

இதுகுறித்து பள்ளி வளாகத்திலிருந்த சில பெற்றோர்கள் கூறுகையில், அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆஸ்பெடோஸ் தகரத்தின் மூலம் கூரை அமைத்ததுடன், மாணவர்கள் அமர்ந்திருக்கும் மேஜைகள் அனைத்தும் இரும்பினால் செய்யப்பட்டிருந்ததாகவும், இதனால் மின்னல் பாய்ந்தபோது வகுப்பறையினுள் மேஜையில் அமர்ந்திருந்த மாணவிகளின் மீது மின்சாரம் பாய்ந்து அவர்கள் காயமடைந்ததாகக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், படுகாயமடைந்த மாணவர்கள் அனைவரும் அங்குள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் அனைவரின் உடல்நிலையும் சீராகவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட காரணமாய் இருந்த பள்ளியின் கட்டமானம் குறித்தும் அங்கு பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:மேற்குவங்கத்தில் வக்ஃப் திருத்த மசோதா அமல்படுத்தப்படாது: மமதா பானர்ஜி

மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ சனிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

தூத்துக்குடி: நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு

தூத்துக்குடி: கடலில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக சீலா ஒரு கிலோ ரூ.1,300-க்கு விற்பனை செய்ய... மேலும் பார்க்க

மேல்பாதி திரௌபதியம்மன் கோயில்: 3 ஆவது நாளாக தரிசனம் செய்ய வராத மக்கள்!

விழுப்புரம்: மேல்பாதி அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில் வழிபாட்டுக்காக மூன்றாவது நாளாக சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது. ஆனால், மக்கள் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு ... மேலும் பார்க்க

ஜகதீப் தன்கருடன் ஆர்.என். ரவி சந்திப்பு

புதுதில்லி: குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை தில்லியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்து பேசினார். மேலும் பார்க்க

மதுவிலக்கு: வனப்பகுதியில் சிறப்பு சோதனை

நெய்வேலி: கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறையினர் மதுவிலக்கு சம்பந்தமாக சிறுபாக்கம் காவல் சரகப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சனிக்கிழமை சிறப்பு சோதனை நடத்தினர். காட்டுப்பகுதிகளில் கள்ளத்தனமாக சாரா... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ கட்சி விலகல்

அதிமுகவுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள எஸ்டிபிஐ கட்சி, பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ பெ... மேலும் பார்க்க