செய்திகள் :

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ்!

post image

பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை ஜிஎஸ்டி கட்டமைப்பில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் நிரூபிக்கின்றன என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாடு தனது பிம்பத்தை உலகிற்கு வெளிப்படுத்திய விதம் குறிப்பிடத்தக்கது. பிரதமர் அனைத்துத் துறைகளிலும் சமமான அக்கறை எடுத்துக்கொள்கிறார். உலகளாவிய கொந்தளிப்பின் தற்போதைய சூழலில் கூட, அவர் தனது நாட்டு மக்கள், தொழில்முனைவோர் மற்றும் ஏழ்மையானவர்களைக் கவனித்துக்கொள்கிறார்.

ரொட்டி முதல் ஹேர் ஆயில், ஐஸ்கிரீம்கள் மற்றும் டிவிக்கள் வரை அனைத்து பொதுவான பயன்பாட்டுப் பொருள்களின் விலையும் குறைக்கப்படும் என்றும் அதே நேரத்தில் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீடு மீதான வரி விகிதம் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும் என்றும் புதன்கிழமை ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்தது.

செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் வகையில், 5 சதவீதம் மற்றும் 18 சதவீதமாக வரம்புகளை நிர்ணயிக்க ஒப்புதல் அளித்தது. அரசு உள்நாட்டு செலவினங்களை அதிகரிக்கவும், அமெரிக்க வரிகளின் பொருளாதார சுமையைக் குறைக்கவும் முயல்வதால், கிட்டத்தட்ட அனைத்து தனிப்பட்ட பயன்பாட்டுப் பொருள்களும் விகிதக் குறைப்பு செய்யப்படும்.

மோடி தனது சுதந்திர தின உரையில் மக்களுக்கு விரைவில் பல நன்மைகள் கிடைக்கும் என்று அறிவித்தார். “அவர் சொன்னது போல், அந்த நன்மைகள் (ஜிஎஸ்டி தளர்வுகள்) நவராத்திரியிலிருந்து (செப்டம்பர் 22) நாம் கிடைக்கப்பெறுவோம்.

ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அன்றாட வாழ்வில் அவற்றைப் பயன்படுத்தும் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கும் என்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று அவர் கூறினார்.

ஏழைகள், விவசாயிகள், பொதுமக்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணத்தை வழங்கும் என்று மத்தியப் பிரதேச அவைத்தலைவர் நரேந்திர சிங் தோமரும் மத்திய அரசின் முடிவைப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The reforms in GST structure demonstrate Prime Minister Narendra Modi's commitment to the countrymen that he takes care of all, including entrepreneurs, despite the global turmoil, Madhya Pradesh Chief Minister Mohan Yadav said on Thursday.

குஜராத்: மலைக் கோயிலில் சரக்கு ரோப் காா் அறுந்து விழுந்தது! 6 போ் உயிரிழப்பு

குஜராத் மலைக் கோயிலில் சரக்குகளை எடுத்துச் செல்லும் ரோப் காா் அறுந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். பஞ்சமஹல் மாவட்டத்தின் பாவாகட் மலையில் பிரசித்தி பெற்ற மகாகாளி கோயில் அமைந்துள்ளது. 800 மீட்டா் உய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பாஜக சாா்பில் நாடு தழுவிய விழிப்புணா்வு பிரசாரம்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் தொடா்பாக பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. நாட்டில் நான்கு விகித ஜிஎஸ்... மேலும் பார்க்க

மேற்கு வங்க அமைச்சா் நீதிமன்றத்தில் சரண்!

அரசுப் பள்ளி பணியாளா்கள் நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க மாநில அமைச்சா் சந்திரநாத் சின்ஹா அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா். அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அவரது தொகுதியைவிட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தினசரி உபயோகப் பொருள்கள்: வரைவு தரநிலை வழிகாட்டுதல் வெளியீடு!

சமையல் பாத்திரங்கள், மரப் பொருள்கள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட தினசரி உபயோகப் பொருள்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த தடையில்லாத வகையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரைவு தரநிலை வழிகாட்டுதலை மத்த... மேலும் பார்க்க

நாம் இருவா்; நமக்கு இருவா் கொள்கை மோடி அரசுக்கு மட்டும் தானா? காங்கிரஸ் கேள்வி

‘ஒவ்வொரு இந்திய தம்பதியும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ‘நாம் இருவா்; நமக்கு இருவா்’ கொள்கை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ... மேலும் பார்க்க

தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் சரத்குமாா் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக பாஜகவைச் சோ்ந்த நடிகா் ஆா்.சரத்குமாா் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அவருடன் தமிழக பாஜக துணைத் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுந்தரும் உடனி... மேலும் பார்க்க