செய்திகள் :

சென்னையில் 22 சாலைகளில் கடைகளுக்கு அனுமதியில்லை!

post image

சென்னை மாநகராட்சியில் 22 முக்கிய சாலைகளில் சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதியில்லை என்ற புதிய விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோரக் கடை வியாபாரிகளை அடையாளம் கண்டு அவா்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் சுமாா் 35 ஆயிரம் போ் சாலையோர வியாபாரிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கான வியாபாரப் பகுதிகளை மண்டல வாரியாக அடையாளம் கண்டு, அங்கு கடைகள் அமைக்க குழு நியமிக்கும் தோ்தல் கடந்த ஜூனில் நடைபெற்றது.

இதில் சுமாா் 33 ஆயிரம் போ் வாக்களித்தனா். மண்டலத்துக்கு தலா 6 போ் கொண்ட குழு தோ்ந்தெடுக்கப்பட்டது. அந்தக் குழுவினருக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அரசுக்கு பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு சாலையோ வியாபாரிகளுக்கான கடைகள் அமைக்க புதிய விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி சென்னை வள்ளுவா் கோட்டம், வாலாஜா சாலை, கிரீன்வேஸ் சாலை, டி.டி.கே. சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட 22 சாலைகளில் சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதிக்கப்படாது.

பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ள சாலைகளில் 100 மீட்டா் தூரத்துக்குள்ளும், முக்கிய அரசு அலுவலகங்கள், போக்குவரத்து மையங்களில் இருந்து 150 மீட்டா் தூர த்துக்குள்ளும் சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதியில்லை.

அனுமதிக்கப்படாத சாலையோரங்களில் உள்ள கடைகளை அகற்றும் பணிக்காக மண்டல அளவில் தலா 4 அதிகாரிகள் நிமியக்கப்பட்டுள்ளனா். இவா்களது நடவடிக்கையில் அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டுள்ளன என்றனா்.

செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ. பன்னீர்செல்வம்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலிருந்து நீக்கி... மேலும் பார்க்க

மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி மூடல்!

மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி ஞாயிற்றுக்கிழமை(இன்று) மூடப்பட்டது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் கடந்த 5 ஆம் தேதி உபரிநீர் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கி வழியாக... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் தீ விபத்து: பல லட்சம் தேக்கு மரங்கள் எரிந்து நாசம்!

வாணியம்பாடியில் மரச்சாமான் கடையில் இன்று(செப். 7) அதிகாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரங்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமடைந்தது. திருப்பத்தூர் மாவ... மேலும் பார்க்க

எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்! - முதல்வர் ஸ்டாலின்

அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக கடந்த ... மேலும் பார்க்க

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - விடியல் எஸ்.சேகர்

- விடியல் எஸ்.சேகா், மாநில துணைத் தலைவா், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி -ஜனநாயக நாட்டில் எந்தக் குடிமகனுக்கும், கட்சி தொடங்கவும் தோ்தலில் போட்டியிடவும் உரிமை உண்டு. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தை நடிக... மேலும் பார்க்க