செய்திகள் :

ஜிஎஸ்டி 2.0: ரூ.5 பார்லே-ஜி பிஸ்கெட் விலை குறைந்தது! விலைகளில் நடந்த மேஜிக்

post image

சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக விலையில் மாற்றமின்றி, அதிகம் விற்பனையாகிவந்த பார்லே-ஜியின் ரூ.5 மற்றும் ரூ.10-க்கு விற்கப்பட்ட பாக்கெட்டுகளின் விலை ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் சற்றுக் குறைந்துள்ளது.

இந்தியாவில், அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் மீது, ஜிஎஸ்டி 2.0 நிச்சயம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லும் அளவுக்கு ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது.

அதாவது, விலை குறைந்த, ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருள்கள், பொதுவாக அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருள்களாகக் கருதப்படுகிறது.

அந்த வகையில், விலையை உயர்த்தாமல், பல ஆண்டு காலமாக, ரூ.5க்கு விற்பனையாகி வந்த பார்லே-ஜி பிஸ்கெட் விலை தற்போது ரூ.4.45க்கு விற்பனையாகிறது.

அது மட்டுமல்ல, இதுவரை ஒரு ரூபாய்க்கு விற்பனையாகி வந்த சாக்லேட் விலைகள் 88 பைசாவாகக் குறைந்திருக்கிறது. இனி, ஒரு ரூபாய் சில்லறை இல்லை என ஒரு சாக்லேட் கொடுக்க முடியாத நிலை பாவம் கடைக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமா, ஒரு பாக்கெட் வாங்கினால் போதும் இரண்டு தலைக்கு என்ற நிலையில் இருக்கும் ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.2 ஷாம்பு பாக்கெட் விலைகளும் கணிசமாகக் குறைந்துள்ளது. இனி, அவை ரூ.1.77க்கு விற்பனையாகும்.

ஆனால், கையில் காசு கொடுத்து பொருள்கள் வாங்குவோருக்கு இந்த விலைக் குறைப்புகள் எல்லாம் சென்று சேருமா என்றால் சேராது என்றே கணிக்கப்படுகிறது.

பால் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்கள் பூஜ்ய வரி முறைக்கும், அத்தியாவசியப் பொருள்கள் 5 சதவீத ஜிஎஸ்டி வரம்பிலும், தேவையான சேவைகள் மற்றும் சரக்கு 18 சதவீத வரி விதிப்பிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 47 காசுகள் சரிந்து ரூ.88.75ஆக நிறைவு!

மும்பை: அந்நிய நிதி தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், அமெரிக்க எச்-1பி விசா கட்டணம் கடுமையாக உயர்ந்ததன் பின்னணியில், இந்திய ஐடி சேவைகள் ஏற்றுமதியில் பெரும் சரிவு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படு... மேலும் பார்க்க

வர்த்தக ஆரம்பத்தில் உயர்ந்தும் பிறகு சரிந்தும் முடிந்த பங்குச் சந்தை!

மும்பை: அமெரிக்க எச்-1பி விசா கட்டணங்கள் கடுமையாக உயர்ந்த கவலைகளுக்கு மத்தியில், ஐடி மற்றும் ப்ளூ-சிப் தனியார் வங்கி பங்குகளை, முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததாலும், அதே வேளையில் அந்நிய நிதி வெளியேற்றம்... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் குழுத் தகவல்களை தவறவிடுகிறீர்களா? விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்ஆப் குழுவில் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு பதிவிடப்படும் தகவல்களை தவறவிடுவதைத் தவிர்க்கும் வகையில் புதிய சோதனையில் வாட்ஸ்ஆப் ஈடுபட்டுள்ளது. இதன்படி, அனைவரையும் குறிப்பிட்டுப் பதிவிடப்படும் வாட... மேலும் பார்க்க

ஒரே நாளில் 2 முறை விலையுயர்ந்த தங்கம்: மக்கள் அதிர்ச்சி!

ஆபரணத் தங்கம் விலை நேற்று போல் இன்றும் ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது. அந்தவக... மேலும் பார்க்க

டிரம்ப்பின் 25% வரி விதிப்பால் என்னென்ன துறைகளுக்கு அதிக பாதிப்பு?

இந்திய பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் 25 சதவீத வரி விதிப்பால் வேளாண்மை, எரிசக்தி, ஜவுளி, மின்னணுப் பொருள்கள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்பட பல முக்கியத் துறைகள் பாதிக்கப்படும் என்று ... மேலும் பார்க்க

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி சிறப்பு முகூர்த்த வர்த்தகம்!

புதுதில்லி: தீபாவளி பண்டிகையைக் குறிக்கும் வகையில், அக்டோபர் 21ஆம் தேதி சிறப்பு முகூர்த்த வர்த்தக நடைபெறும் என்று தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) தெரிவித்துள்ளது. வர்த்தகமானது மதியம் 1:45 மணி தொடங்கி 2... மேலும் பார்க்க