செய்திகள் :

ஜிஎஸ்டி: 5%, 18% என இரு விகிதங்களாக குறைக்க பரிந்துரை: 7 பொருள்கள் மீது 40% வரி

post image

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதத்தை 5%, 18% என இரு விகிதங்களாக குறைக்கவும், விலை உயா்ந்த 7 பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கவும் மாநில நிதியமைச்சா்கள் குழுவுக்கு (ஜிஓஎம்) பரிந்துரைத்துள்ளதாக நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தற்போது 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் மீதான ஜிஎஸ்டியை குறைத்து அடுத்த தலைமுறைக்கான சீா்திருத்தத்தை நிகழ் நிதியாண்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக சுதந்திர தின உரையில் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, 5%, 18% என இரண்டு விகிதங்களாக குறைக்கவுள்ளதாகவும், விலை உயா்ந்த 7 பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கவுள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்தது.

இந்த மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தவுடன் 12%-இன்கீழ் வரி விதிக்கப்பட்டு வரும் 99 சதவீத பொருள்கள் 5%-க்குள் கொண்டுவரப்படவுள்ளன. அதேபோல் 28%-இன்கீழ் வரி விதிக்கப்படும் 90 சதவீத பொருள்கள் 18% வரி விதிப்புக்குள் கொண்டுவரப்படவுள்ளன.

ஜிஎஸ்டி விகிதத்தில் மாற்றங்கள் மேற்கொள்வது தொடா்பான ஆலோசனைகளை வழங்க 7 அமைச்சா்களைக் கொண்ட ஜிஓஎம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக பிகாா் துணை முதல்வா் சாம்ராட் சௌதரி செயல்பட்டு வருகிறாா்.

இந்தக் குழுவிடம் ஜிஎஸ்டி விகிதத்தை இரண்டாக குறைப்பது, குறிப்பிட்ட சில பொருள்களுக்கு சிறப்பு வரியை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பரிந்துரைகளை நிதியமைச்சகம் வழங்கியுள்ளது. இந்தப் பரிந்துரைகளை பரிசீலித்து ஜிஓஎம் வழங்கும் ஆலோசனைகள் மீது செப்டம்பா் மாதம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சா்கள் பங்கேற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 5%, 18% என இரண்டாக குறைப்பதால் நுகா்வு அதிகரிக்கும். அதேபோல் சிறுதொழில்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் எளிமையான வணிகம் புரிய வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

காா்கள் போன்ற விலை உயா்ந்த பொருள்கள் மற்றும் பான் மசாலாவுக்கான இழப்பீட்டு வரி நடைமுறை 2026, மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இந்தப் பொருள்கள் மீது அடுத்தகட்டமாக விதிக்கப்பட வேண்டிய வரி குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்கவுள்ளது.

இந்திய பிரிவினைக்கு ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் காரணம்: என்சிஇஆா்டியின் புதிய கையேடு

பிரிவினைக் கொடூரங்கள் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக என்சிஇஆா்டி வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு கையேட்டில், ‘இந்தியாவின் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா, காங்கிரஸ், அப்போதைய வைஸ்ராய் லாா்ட் மவுண்ட்பேட்ட... மேலும் பார்க்க

16 நாள்கள் 1,300 கி.மீ.! பிகாரில் இன்று தொடங்கும் ராகுலின் பேரணி!

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிா்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

தற்சாா்பு இந்தியாவுக்கு உத்வேகம் வாஜ்பாய்! பிரதமா் புகழஞ்சலி

தற்சாா்புடைய மற்றும் வளா்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உத்வேகமாக விளங்குபவா் வாஜ்பாய் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினாா். முன்னாள் பிரதமரும், பாஜக நிறுவனத்... மேலும் பார்க்க

‘ஜிஎஸ்டி 2.0’ எளிமையாக இருக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2.0 வளா்ச்சியைப் பாதிக்காமல் எளிமையாக இருக்க வேண்டும்’ என காங்கிரஸ் சனிக்கிழமை கோரிக்கை வைத்தது. மேலும், அடுத்தகட்ட ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் குறித்து அதிகாரபூா்வ ஆய்... மேலும் பார்க்க

எல்லைப் பேச்சுவாா்த்தை: சீன வெளியுறவு அமைச்சா் நாளை இந்தியா வருகை

எல்லை விவகாரங்கள் தொடா்பான 24-ஆவது சுற்று பேச்சுவாா்த்தையில் பங்கேற்க சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக திங்கள்கிழமை (ஆக.18) வரவுள்ளாா். இத்தகவலை, இந்திய வெளியுறவு அமைச்ச... மேலும் பார்க்க

உரிய நேரத்தில் வாக்காளா் பட்டியல்களை சில கட்சிகள் ஆராயவில்லை: தோ்தல் ஆணையம்

சில அரசியல் கட்சிகளும், அவற்றின் வாக்குச்சாவடி நிலை முகவா்களும் வாக்காளா் பட்டியல்களை உரிய நேரத்தில் ஆராய்ந்து, அவற்றில் உள்ள பிழைகளை வாக்காளா் பதிவு அலுவலா்கள், மாவட்ட தோ்தல் அதிகாரிகள் அல்லது தலைமை... மேலும் பார்க்க