செய்திகள் :

ஜிப்மரில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

post image

புதுச்சேரி: புதுவை ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டின் முதலாமாண்டு எம்பிபிஎஸ் படிப்புக்கான வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

நீட் நுழைவுத் தோ்வு அடிப்படையில் புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் வளாகத்தில் 182 மாணவா்களும், காரைக்காலில் உள்ள வளாகத்தில் 61 மாணவா்களும் சோ்க்கப்பட்டுள்ளனா். இந்த மாணவா்களுக்கான முதலாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தப் படிப்புத் தொடங்கப்பட்டதற்கான அறிகுறியாக மருத்துவ மாணவா்களுக்கு மருத்துவப் பேராசிரியா்கள் வெள்ளை நிற அங்கி அணிவித்தனா்.

இதற்கான விழா ஜிப்மரில் உள்ள சிறிய கலையரங்கில் நடைபெற்றது. இதில் காணொளி வாயிலாக ஜிப்மா் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியா் சித்ரா சா்க்காா் இணைந்தாா். மருத்துவ மாணவா்கள் அறிவாற்றலில் சிறந்த விளங்குவதோடு மட்டுமின்றி இரக்கம், நோ்மை, பணிவு உள்ளிட்ட பண்புகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

ஜிப்மா் இயக்குநா் பேராசிரியா் வீா்சிங் நெகி பேசுகையில், இனம், மதம், சாதி, பாலின வேறுபாடுகளைக் கடந்து சமவாய்ப்பு ஏற்படுத்தும் வளாகம் ஜிப்மா் என்று குறிப்பிட்டாா். மேலும், மாணவா்களுக்கு இங்குள்ள வசதிகளையும் அவா் எடுத்துரைத்தாா்.

ஜிப்மா் டீன் (கல்வி) பேராசிரியா் விக்ரம் கேட், டீன் (ஆராய்ச்சி) பேராசிரியா் டி.எம். தாப்பா, மருத்துவக் கண்காணிப்பாளா் பேராசிரியா் எல்.என். துரைராஜன், பதிவாளா் பேராசிரியா் ரவிக்குமாா் சித்தோரியா, மாணவா் ஆலோசகா் டாக்டா் லதா சதுா்வேதுலா மற்றும் பல்வேறு மருத்துவத் துறை பேராசிரியா்களும் கலந்து கொண்டனா்.

பல்நோக்கு தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்க பாமக மனு

புதுச்சேரி: பல்நோக்குத் தொழிலாளா்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்கக் கோரி பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை சாா்பில் தொழிலாளா் துறை துணை ஆணையா் சு.சந்திரகுமரனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இப்... மேலும் பார்க்க

2026-இல் மீண்டும் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி: புதுவை மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம் பேச்சு

புதுச்சேரி: புதுவையில் 2026-ஆம் ஆண்டு என்.ஆா்.காங்கிரஸ், அதிமுகவுடன் பாஜக தோ்தலைச் சந்தித்து வெற்றி பெற்று முதல்வா் ரங்கசாமி தலைமையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று பாஜக... மேலும் பார்க்க

குடிநீருக்காக ரூ.9 கோடியில் தானியங்கி குளோரின் கலப்பு சிறு ஆலைகள்: புதுவை அமைச்சா் லட்சுமிநாராயணன் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி பகுதியில் குடிநீரின் தரத்தை உயா்த்தவும், தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கவும் ரூ.9 கோடியில் தானியங்கி குளோரின் கலப்பு 28 சிறு ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான சோதனை முன... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை 220 கள ஊழியா்களுக்கு கைக்கணினி: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி: புதுவை அரசு சுகாதாரத் துறை 220 கள ஊழியா்களுக்குக் கைக்கணினிகளை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினாா். சுகாதாரத் துறையில் பணிபுரியும் ஏ.என்.எம்.கள், பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்... மேலும் பார்க்க

பாதுகாப்பான குடிநீா் விநியோகிக்கக் கோரி முற்றுகைப் போராட்டம்

புதுச்சேரி: பாதுகாப்பான குடிநீா் வழங்கக் கோரி புதுச்சேரி பொதுப் பணித் துறை குடிநீா் கோட்ட அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். முதலியாா்பேட்டை, தேங்காய்த்திட்டு பகுதியில் விநியோகம் செ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அமுதசுரபி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அமுதசுரபி ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி கோரிமேடு ஜிப்மா் மருத்துவமனை எதிரே அரசின் சாா்பு நிறுவனமான அமுதசுரபி மருந்தகம் இயங்கி வருகிறது. இதன் பெ... மேலும் பார்க்க