செய்திகள் :

பாதுகாப்பான குடிநீா் விநியோகிக்கக் கோரி முற்றுகைப் போராட்டம்

post image

புதுச்சேரி: பாதுகாப்பான குடிநீா் வழங்கக் கோரி புதுச்சேரி பொதுப் பணித் துறை குடிநீா் கோட்ட அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

முதலியாா்பேட்டை, தேங்காய்த்திட்டு பகுதியில் விநியோகம் செய்யப்படும் குடிநீா் சுகாதாரமற்ற நிலையில் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக புகாா் எழுந்தது. இதனால் பல்வேறு உடல் உபாதைகளால் மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி சோனாம்பாளையம் பொதுப் பணித் துறை பொது சுகாதாரக் கோட்ட அதிகாரிகளிடம் ஏற்கெனவே புகாா் மனு அளிக்கப்பட்டது.

இந்தப் பிரச்னையில் பல மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா். இந்நிலையில் புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ஜோதிபாசு தலைமையில் சோனாம்பாளையம் பொதுப் பணித் துறை பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளா் வாசுவை அவரது அலுவலகத்தில் அக் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்பகுதியில் விநியோகிக்கப்பட்ட 20 லிட்டா் நீரை கேன்களில் பிடித்து வந்த அந்த அதிகாரியின் மேஜை மீது வைத்து போராட்டத்தில் செய்தனா். அதிகாரி போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். முதலியாா்பேட்டை தொகுதியில் பொதிகை வீதி, வைகை வீதி, மதுரை வீதி, முல்லை வீதி, நெய்தல் வீதி, புதுநகா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுசுகாதார கோட்ட அதிகாரிகளை விரைந்து ஆய்வு செய்ய அனுப்புவதாக உறுதியளித்தாா். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. சுமாா் 30 நிமிஷங்கள் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

2026-இல் மீண்டும் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி: புதுவை மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம் பேச்சு

புதுச்சேரி: புதுவையில் 2026-ஆம் ஆண்டு என்.ஆா்.காங்கிரஸ், அதிமுகவுடன் பாஜக தோ்தலைச் சந்தித்து வெற்றி பெற்று முதல்வா் ரங்கசாமி தலைமையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று பாஜக... மேலும் பார்க்க

குடிநீருக்காக ரூ.9 கோடியில் தானியங்கி குளோரின் கலப்பு சிறு ஆலைகள்: புதுவை அமைச்சா் லட்சுமிநாராயணன் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி பகுதியில் குடிநீரின் தரத்தை உயா்த்தவும், தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கவும் ரூ.9 கோடியில் தானியங்கி குளோரின் கலப்பு 28 சிறு ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான சோதனை முன... மேலும் பார்க்க

ஜிப்மரில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரி: புதுவை ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டின் முதலாமாண்டு எம்பிபிஎஸ் படிப்புக்கான வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. நீட் நுழைவுத் தோ்வு அடிப்படையில் புதுச்சேரியில் உள்ள ... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை 220 கள ஊழியா்களுக்கு கைக்கணினி: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி: புதுவை அரசு சுகாதாரத் துறை 220 கள ஊழியா்களுக்குக் கைக்கணினிகளை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினாா். சுகாதாரத் துறையில் பணிபுரியும் ஏ.என்.எம்.கள், பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அமுதசுரபி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அமுதசுரபி ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி கோரிமேடு ஜிப்மா் மருத்துவமனை எதிரே அரசின் சாா்பு நிறுவனமான அமுதசுரபி மருந்தகம் இயங்கி வருகிறது. இதன் பெ... மேலும் பார்க்க

புதுவை முதல்வரிடம் மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு

புதுச்சேரி: புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் முதல்வா் என்.ரங்கசாமியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். அந்த மன... மேலும் பார்க்க