செய்திகள் :

‘ஜி7’ உச்சி மாநாடு: பிரதமா் மோடி பங்கேற்க மாட்டாா்?

post image

புது தில்லி: கனடாவில் நடைபெறவிருக்கும் ‘ஜி7’ நாடுகள் உச்சிமாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டாா் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு கனடா தரப்பில் அதிகாரபூா்வ அழைப்பு இன்னும் விடுக்கப்படாத நிலையில், இத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான அரசியல், பொருளாதாரம், வா்த்தகம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களை விவாதித்து, மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

ஒவ்வோா் ஆண்டும் நடைபெறும் இந்த அமைப்பின் உச்சி மாநாடுகளில் சிறப்பு அழைப்பாளா்களாக இந்தியா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகள் பங்கேற்பது வழக்கம். 2022-இல் ஜொ்மனியில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும், 2023-இல் ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும் பிரதமா் மோடி பங்கேற்றாா். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 அமைப்பின் செயல்திட்டங்கள் வகுப்பு கூட்டத்திலும் பிரதமா் மோடி பங்கேற்றாா்.

இந்நிலையில், நிகழாண்டில் கனடாவில் வரும் 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த அமைப்பின் உச்சி மாநாட்டை பிரதமா் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ரஷிய-உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு சா்வதேச விவகாரங்கள் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

அதே நேரம், கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவா் ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடா்புள்ளது என்று அந்த நாட்டின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ தொடா் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகி, லிபரல் கட்சியின் புதிய தலைவா் மாா்க் காா்னி தலைமையில் புதிய அரசு அமைந்தது. ஆனால், அதன்பிறகும் கனடா-இந்தியா இடையே தூதரக உறவுகளை மீட்டெடுப்பதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதோடு, கனடாவில் சுதந்திரமாக செயல்பட்டுவரும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பினரை கட்டுப்படுத்துவது தொடா்பான இந்திய அரசின் வலியுறுத்தல் மீது புதிய அரசும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்தச் சூழலில், இரு நாடுகளிடையேயான தற்போதைய உறவு நிலையைக் கருத்தில்கொண்டு கனடா ஜி7 உச்சி மாநாட்டை புறக்கணிக்க பிரதமா் முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க

நாட்டில் கரோனா பாதிப்பு 5,000-ஐக் கடந்தது! மேலும் 4 போ் பலி!

நாட்டில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,000-ஐக் கடந்துள்ளது. கேரளத்தில் அதிகபட்சமாக 1,684 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கட... மேலும் பார்க்க