செய்திகள் :

ஜெயலலிதா: ``என் அத்தையின் நகைகளை என்னிடமே கொடுக்க வேண்டும்..!" - உச்ச நீதிமன்றத்தில் ஜெ. தீபா

post image

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்றார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய தீர்ப்பாக இது அமைந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தள்ளுபடி செய்திருந்தார்.

ஜெயலலிதா

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுகள் செய்யப்பட்ட நிலையில், 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா உயிரிழந்ததை அடுத்து, 2017 ஆம் ஆண்டு இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதே நேரத்தில் சசிகலா உள்ளிட்டோரை குற்றவாளிகளின் அறிவித்ததோடு தண்டனையையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த வழக்கின் ஆரம்ப கட்டத்திலேயே தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து தங்கம், வைரம், வெள்ளி, விலை உயர்ந்த கற்கள் உள்ளிட்ட நகைகளை பறிமுதல் செய்து இருந்தனர். அவை அனைத்தும் இப்போது வரை கர்நாடகா அரசு கருவூலத்தில் பத்திரமாக உள்ளது.

இந்த நகைகள் மீது உரிமை கொண்டாடிய ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோரின் மனுக்களை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அதற்கு எதிராக தீபா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

``சட்டப்படி எங்கள் அத்தைக்கு நாங்கள் தான் வாரிசு. எனவே அவருடைய சொத்துக்கள் மீது எங்களுக்கு முழு உரிமை உள்ளது. எனவே அரசின் கருவூலத்தில் உள்ள நகைகள் உள்ளிட்டவற்றை எங்களிடமே ஒப்படைக்க வேண்டும்” என தீபா கேட்டுக் கொண்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`ஆளுநர் அதிகாரங்களை குறை மதிப்பிட்டு இருக்கிறார்கள்' - இறுதிக்கட்டத்தில் வழக்கு; இன்று நடந்தது என்ன?

இன்றும் தொடர்ந்த வழக்கு விசாரணை..!தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழ்நாடு அரசு உரிய உத்தரவுகளை பெற்று வருகிறது. தமிழ்நாடு ஆளுநரும் உச்ச நீதிமன்... மேலும் பார்க்க

"நான் அளித்த 1 லட்ச தீர்ப்புகளும் முருகன் கூறியதுதான்..." - சர்ச்சையைக் கிளப்பிய முன்னாள் நீதிபதி

காரைக்குடி நெற்குப்பை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம், தான் 28 ஆண்டுகளாக நீதித்துறையில் பணியாற்றி, ஒரு லட்சம் ... மேலும் பார்க்க

RN Ravi: `யார் அறிவுரையின்படி ஆளுநர் இவ்வாறு செயல்படுகிறார்?’ - உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கு..! தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இன்றைய வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிப... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதான விவகாரம்: யூடியூபர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல வீடியோ எடுத்த சம்பவத்தில் யூடியூபர் திவ்யா, அவரின் நண்பர் கார்த்திக், சித்ரா, ஆனந்த் ராமன் ஆகிய நான்கு பேர் கடந்... மேலும் பார்க்க

ஈமு கோழி மோசடி : ஏமாற்றியவருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.19 கோடி அபராதம் - கோவை நீதிமன்றம் அதிரடி

கொங்கு மண்டலத்தில் மக்களின் ஆசைகளை தூண்டு விட்டு பல்வேறு நூதன மோசடிகள் அரங்கேறின. அதில் ஈமு கோழி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். சுமார் 15 ஆண்டுகளாகியும் ஈமு கோழி மோசடி வழக்கு விசாரணை இப்போதும் ... மேலும் பார்க்க

`இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது; அதை ஒரே வருடத்தில் கலைக்க முடியாது'- உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேசத்தில் திருமண விவாகரத்து வழக்கு ஒன்றில், இரண்டு இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது என்றும், திருமணமான ஓர் ஆண்டுக்குள் அதைக் கலைக்க முடியாது என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் குறிப்ப... மேலும் பார்க்க