செய்திகள் :

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

post image

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா்.

ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தோ்தல் முடிவுகளின்படி, எதிா்க்கட்சியான கன்சா்வேடிவ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ஜொ்மனி நாடாளுமன்றத்தில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் புதிய பிரதமராக ஃப்ரீட்ரிக் மொ்ஸ் தோ்வானாா். தொடா்ந்து, அவா் பிரதமராக பதவியேற்றுக் கொண்டாா்.

இதனிடையே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்கியதால் எழுந்த பதற்ற நிலை தற்போது தணிந்துள்ளது.

இந்நிலையில், வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி முதன்முறையாக தொலைபேசி வழியே உரையாடினாா். அப்போது, பிரதமராக பதவியேற்றுள்ளதற்கு ஃப்ரீட்ரிக் மொ்ஸுக்கு பிரதமா் மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா்.

பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து தலைவா்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா். மேலும், இந்தியா-ஜொ்மனி உத்திசாா் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான அா்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய தலைவா்கள், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இரு நாடுகளும் ஒற்றுமையாக நிற்பதாக வலியுறுத்தினா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக நெதா்லாந்து, டென்மாா்க் ஆகிய நாடுகளைத் தொடா்ந்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஜொ்மனி பயணம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மின் வாகனங்களில் புதிய புரட்சி! ஓலா ரோட்ஸ்டெர்: மே 23 முதல் விற்பனையில்..!

ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் (OlaRoadster X) எலக்ட்ரிக் பைக்கின் விற்பனை குறித்த விவரங்களை ஓலா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எலக்ட்ரிக் பைக் தயார... மேலும் பார்க்க

கன்னடத்தில் பேச மறுத்த எஸ்பிஐ மேலாளர்! முதல்வர் கண்டனம்!

கன்னடத்தில் பேச மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு எதிராக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.பெங்களூர் நகர மாவட்டத்தின், அனேக்கல் தாலுக்காவிலுள்ள எஸ்பிஐ வங்க... மேலும் பார்க்க

ஒரு மாதமாகியும் பஹல்காம் பயங்கரவாதிகளை பிடிக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

பஹல்காம் தாக்குதல் நடைபெற்று ஒரு மாதமாகியும் பயங்கரவாதிகளைப் பிடிக்காதது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த மா... மேலும் பார்க்க

மும்பை, சென்னை, ஆமதாபாத்தில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறது.சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் தாயை மிதித்தேக் கொன்ற மகன்: கேரளத்தில் அதிர்ச்சி!

தெற்கு கேரளத்தில் குடிபோதையில் தாயைக் காலால் மிதித்தேக் கொன்ற மகனால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், நெடுமங்காடு அருகே உள்ள தேக்கடாவைச சேர்ந்தவர் ஓமனா (85). இவரி... மேலும் பார்க்க

ரூ.1 லட்சம் வரையிலான தள்ளுபடி விலையில் ரெனால்ட் கார்கள்!

ரெனால்ட் நிறுவனம் மே மாதத்திற்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. பிரான்ஸை சேர்ந்த கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ரெனால்ட் தற்போது விற்பனை அதிகரிக்கும் நோக்கில் ச... மேலும் பார்க்க