செய்திகள் :

ஜோக்கர்ஸ் யாரு..? சீண்டிய ஆஸி. வீரர்களுக்கு பதிலடி கொடுத்த தெ.ஆப்பிரிக்கா!

post image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்களிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் சீண்டியது குறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா மனம் திறந்துள்ளார்.

முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

மேலும், 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐசிசி பட்டத்தை வென்ற வரலாற்றுச் சாதனையும் படைத்தது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி சதமடித்த எய்டன் மார்க்ரம் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த அணி கேப்டன் டெம்பா பவுமா அரைசதம் விளாசியிருந்தார்.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்களிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையான சொற்களை பயன்படுத்தியதாக தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறுகையில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்களை ஜோக்கர்ஸ் (Chokers) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வாக்குவாதத்தைத் தூண்டும் விதமாக எங்களிடம் சீண்டலில் ஈடுபட்டனர்.

எய்டன் மார்க்ரம் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், அவர்களுக்கு (ஆஸ்திரேலிய அணிக்கு) விட்டுகொடுத்துவிடக் கூடாது என்றும் கூறினார்.

இறுதிப் போட்டியில் பலர் எங்களை நம்பினார்கள். பலர் எங்கள் மீது சந்தேகப்பட்டனர். நாங்கள் பல்வேறு நம்பிக்கைகளுடனும், சந்தேகங்களுடன் விளையாட வந்தோம். இந்த வெற்றியின் மூலம் அந்த சந்தேகங்களை எல்லாம் நாங்கள் தற்போது தவிடு பொடி ஆக்கியுள்ளோம்.

பல்வேறு பிரிவுகளாகக் பிரிந்து கிடக்கும் நாட்டில் ஒன்றிணைவதற்கு இதுவே சரியான நேரம் எனக் கருதுகிறோம். இது நம் நாட்டை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். நிறைய சந்தேகங்கள் இருந்தன. ஆனால் நாங்கள் விளையாடிய விதம் அதையெல்லாம் அழித்திருக்கும்” என்றார்.

இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார் நியூசி. கேப்டன்!

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வோம்: ஷர்துல் தாக்குர்

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வோம் என இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார்.இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் இரண்டு நாள்களில் ... மேலும் பார்க்க

டெஸ்ட் கேப்டன் பொறுப்பை நிராகரித்த பும்ரா..! என்ன நடந்தது?

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை தான் நிராகரித்ததாக வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி விலகியதால் புதிய... மேலும் பார்க்க

சிங்கத்தின் குகைக்குள் செல்லும் ஷுப்மன் கில்; தினேஷ் கார்த்திக் சொல்வதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் இந்திய அணியை வழிநடத்தவுள்ள ஷுப்மன் கில் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்... மேலும் பார்க்க

மேத்யூஸின் கடைசி டெஸ்ட் போட்டிக்கு மரியாதை..! வங்கதேச வீரர்கள் இருவர் சதம்!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஓய்வுபெறவிருக்கும் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸின் கடைசி டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் மரியாதை செலுத்தினர்.இலங்கை காலே திடலில் நடைபெறும் இந்தப் போட்டியில் வங்கதேசம் முதல்... மேலும் பார்க்க

மூன்று சூப்பர் ஓவர்கள்; டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை!

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மூன்று சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன.நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடர் நேற்... மேலும் பார்க்க

அவரது பெயர் டெம்பா..! கேப்டனுக்காக பாடல் பாடிய தெ.ஆ. வீரர்கள்!

டபிள்யூடிசியை வென்ற கேப்டனுக்காக தென்னாப்பிரிக்க வீரர்கள் பாடல் பாடிய விடியோ வைரலாகி வருகிறது. நடப்பு சாம்பியனாக இருந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலக டெஸ் சாம்பியன்ஷிப்பை தென்னாப்பிரிக்கா வென்றது. 27 ஆண்... மேலும் பார்க்க