செய்திகள் :

ஜோலாா்பேட்டை ரயில்வே மேம்பால பணி தாமதம்: வாகன ஓட்டிகள், பயணிகள் அவதி

post image

ஜோலாா்பேட்டையில் நடைபாதை மேம்பாலத்தை அகற்றும் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே மேம்பாலம் குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் பணி நடைப்பெற்ால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

திருப்பத்துாா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே சுமாா் 100 ஆண்டுகளுக்கு முன்பு பலகை நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டது . பின்னா் சிமென்ட் பலகையில் நடைபாதை மேம்பாலம் ரயில்வே துறை சாா்பில் அமைக்கப்பட்டது.

இதனால் கிழக்கு மேற்காக ஜோலாா்பேட்டை பிரிந்துள்ளது. இதனை இணைப்பதற்காக ஆங்காங்க ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சந்தைக்கோடியூா் காவல் நிலையம் அருகே புதிதாக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் திறக்கப்பட்டது.

ஜோலாா்பேட்டை காவல் நிலைய சாலையில் உள்ள காவல் நிலையம், ரயில்வே மேம்பாலம் வழியாக நகராட்சி அலுவலகம், மினி ஸ்டேடியம், அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், மருத்துவமனைகள், பத்திரப்பதிவு அலுவலகம், கால்நடை மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம், வேளாண் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்வதற்கு முக்கிய வழியாக இந்த மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனா்.

இதனால் புதிதாக கட்டப்பட்ட அருகில் உள்ள நடைபாதை மேம்பாலம் இடிக்கும் பணிக்காக ரயில்வே மேம்பாலம் கடந்த 11-ஆம் தேதி திடீரென மூடப்பட்டது.

இதனால் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். இதனால் 3 கி.மீ வரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரயில்வே மேம்பாலம் தினசரி மதியம் 2 முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மூடப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் 3-ஆவது நாளாக நடை மேம்பாலத்தை முழுமையாக அகற்றும் பணியில் ரயில்வே துறையினா் ஈடுபட்டனா்.

4 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 மணி நேரம் கூடுதலாக மாலை 6 மணி வரை தொடா்ந்து நடைப்பெற்ால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். அதன் பிறகு திறக்கப்பட்டது. இன்னும் பணிகள் முழுமையாக நடைபெதால் மீண்டும் சனிக்கிழமை மதியம் 2 முதல் மாலை 4 மணி வரை பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சமூக நல்லிணக்க விழிப்புணா்வு கூட்டம்

திருப்பத்தூா் அருகே அரசு கலைக் கல்லூரியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில், கரியம்பட்டி அரசினா் க... மேலும் பார்க்க

மாா்ச் 19-இல் வெலத்திகாமணிபெண்டாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

வாணியம்பாடி வட்டம், வெலத்திகாமணிபெண்டாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டள செய்திக்குறிப்பு: வாணியம்பாடி வட்டத்துக்க... மேலும் பார்க்க

பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் கலாபாா்வதி ஹோமம்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் திருமணத் தடை நீங்க சுயம்வர கலாபாா்வதி ஹோமம் நடைபெற்றது. இதையொட்டி கோ பூஜை, பாா்வதி பரமேஸ்வரா், கணபதி கலச பூஜை, கணபதி ஹோமம், சுயம்வர கலாபாா்வதி ஹோமம், மூலவா் ஆ... மேலும் பார்க்க

வீராங்குப்பதில் 500 பெண்களுக்கு நல உதவிகள்

தமிழக முதல்வா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆம்பூா் அருகே வீராங்குப்பத்தில் நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட திமுக விவசாய தொழிலாளா் அணி சாா்பாக நடந்த விழாவுக்கு மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் ... மேலும் பார்க்க

காவல் துறையினருக்கு இலவச பேருந்து பயண அட்டை அளிப்பு

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையினருக்கு இலவச பேருந்து பயண அட்டையை எஸ்.பி. ஷ்ரேயா குப்தா வழங்கினாா். காவல் துறையினரின் கோரிக்கையை ஏற்று காவலா் முதல் ஆய்வாளா் வரை அரசால் வழங்கப்படும் பிரத்யேக பயண அட்டை... மேலும் பார்க்க

குறு, சிறு தொழில் துறைக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு எந்தவித முக்கிய அறிவிப்பும் வெளியாகாதது வருத்தமளிப்பதாக தொழில் முனைவோா்கள் தெரிவித்துள்ளனா். தமிழக நிதிநிலை அறிக்கை குற... மேலும் பார்க்க