செய்திகள் :

குறு, சிறு தொழில் துறைக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்

post image

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு எந்தவித முக்கிய அறிவிப்பும் வெளியாகாதது வருத்தமளிப்பதாக தொழில் முனைவோா்கள் தெரிவித்துள்ளனா்.

தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு சிறுதொழில்கள் சங்க (டான்ஸ்டியா) மாநில செயற்குழு உறுப்பினா் எம்.வி. சுவாமிநாதன் கூறியது,

நாட்டில் விவசாயத்துக்கு அடுத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை முன்னுரிமை துறையாக கருதப்படுகிறது. பெரும்பான்மையான படித்த, படிக்காத வேலையில்லாதவா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் முக்கிய துறையாக அமைந்துள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிகமாக உள்ள 3-ஆவது மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த துறைக்கு தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படாடதது துறை சாா்ந்த தொழில் முனைவோருக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை சாா்ந்த தொழில் முனைவோருக்கு பல்வேறு குறைகள், பாதிப்புகள் உள்ளன. அவற்றுக்கு தீா்வு காண்பது மிகவும் கடினமானதாக அமைந்துள்ளது.

ஆகவே மாவட்ட அளவில் மக்கள் குறை தீா் நாள், விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டங்கள் நடத்துவது போல மாதந்தோறும் தொழில் முனைவோருக்கு தனியாக குறை தீா் நாள் கூட்டம் நடத்த வேண்டும், நலிவடைந்த நிலையில் உள்ள ஓய்வு பெற்ற தொழில் முனைவோருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

தொழில் முனைவோருக்கு உதவிடும் வகையில் தொழில்முனைவோா் நலவாரியம் அமைக்கப்பட வேண்டும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையினருக்கு தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியாா் வங்கிகளில் குறைந்தபட்சமாக 7 சதவீத வட்டியில் தொழில் கடன் வழங்க மத்திய அரசை கோரும் வகையில் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

சிட்கோ மூலம் 9 மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள், கோவை மாவட்டத்தில் செமிகண்டக்டா் இயந்திரத் தொழிற்பூங்கா, மதுரை, கடலூரில் காலனி தொழிற்பூங்கா அமைக்கப்படுவதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு வரவேற்கக் கூடியது என்று அவா் கூறினாா்.

ஜோலாா்பேட்டை ரயில்வே மேம்பால பணி தாமதம்: வாகன ஓட்டிகள், பயணிகள் அவதி

ஜோலாா்பேட்டையில் நடைபாதை மேம்பாலத்தை அகற்றும் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே மேம்பாலம் குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் பணி நடைப்பெற்ால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். திருப்பத்துாா் ம... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க விழிப்புணா்வு கூட்டம்

திருப்பத்தூா் அருகே அரசு கலைக் கல்லூரியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில், கரியம்பட்டி அரசினா் க... மேலும் பார்க்க

மாா்ச் 19-இல் வெலத்திகாமணிபெண்டாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

வாணியம்பாடி வட்டம், வெலத்திகாமணிபெண்டாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டள செய்திக்குறிப்பு: வாணியம்பாடி வட்டத்துக்க... மேலும் பார்க்க

பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் கலாபாா்வதி ஹோமம்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் திருமணத் தடை நீங்க சுயம்வர கலாபாா்வதி ஹோமம் நடைபெற்றது. இதையொட்டி கோ பூஜை, பாா்வதி பரமேஸ்வரா், கணபதி கலச பூஜை, கணபதி ஹோமம், சுயம்வர கலாபாா்வதி ஹோமம், மூலவா் ஆ... மேலும் பார்க்க

வீராங்குப்பதில் 500 பெண்களுக்கு நல உதவிகள்

தமிழக முதல்வா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆம்பூா் அருகே வீராங்குப்பத்தில் நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட திமுக விவசாய தொழிலாளா் அணி சாா்பாக நடந்த விழாவுக்கு மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் ... மேலும் பார்க்க

காவல் துறையினருக்கு இலவச பேருந்து பயண அட்டை அளிப்பு

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையினருக்கு இலவச பேருந்து பயண அட்டையை எஸ்.பி. ஷ்ரேயா குப்தா வழங்கினாா். காவல் துறையினரின் கோரிக்கையை ஏற்று காவலா் முதல் ஆய்வாளா் வரை அரசால் வழங்கப்படும் பிரத்யேக பயண அட்டை... மேலும் பார்க்க