செய்திகள் :

`ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பாஜகவின் B டீம்தான்’ - புதுச்சேரி அரசியல் நகர்வுகளை விவரிக்கும் நாராயணசாமி

post image

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில், 200-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை எந்தவித நுழைவுத் தேர்வும் இல்லாமல் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது புதுச்சேரி அரசு.

எல்.டி.சி, யு.டி.சி உள்ளிட்டப் பணியிடங்கள் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டது. ஆனால் இந்த செவிலியர் பணி, நுழைவுத் தேர்வு எதுவும் இல்லாமல், மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய ஊழலுக்கு இடம் கொடுக்கும். வேண்டியவர்களை உள்ளே நுழைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும். தேர்வில் வெளிப்படைத்தன்மை இருக்காது.

புதுச்சேரி
புதுச்சேரி

புதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு கலால் வரி உயர்த்தப்படுவதாக முதல்வர் அறிவித்தார். அதன்படி எஃப்.எல்-1 எனப்படும் மொத்த மதுவிற்பனை உரிமம் கொண்டவர்களுக்கு ரூ.22 லட்சமாக இருந்த வருடாந்திர உரிமம் ரூ.44 லட்சமாகவும், எஃப்.எல்-2 எனப்படும் சில்லரை விற்பனை மதுக்கடைகளுக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஆனால் ரெஸ்டோ பார்களுக்கு மட்டும் ரூ.6 லட்சமாக இருந்ததை ரூ.1லட்சம் மட்டும் கூடுதலாக சேர்த்து ரூ.7 லட்சமாக உயர்த்தியிருக்கிறார்கள். அதையடுத்து முதல்வர் ரங்கசாமியை சந்தித்த மது விற்பனையாளர்கள், ரெஸ்டோ பாரில் காட்டும் பாரபட்சம், தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று முறையிட்டார்கள்.

ஆனால் அதற்கு செவி சாய்க்காத முதல்வர், அவர்களிடம் கடிந்து பேசியுள்ளார். காரணம் முதல்வர் ரங்கசாமிக்கு வேண்டியவர்கள் ரெஸ்டோ பார்களை நடத்துகின்றனர். இதில் மிகப்பெரிய ஊழல் நாடகம் நடந்துள்ளது. முதல்வருடன் ஆறு புரோக்கர்கள் உள்ளனர். அவர்கள் மது விற்பனையாளர்களிடம் ரூ.25 கோடி கேட்டு பேரம் பேசியுள்ளனர்.

அதாவது மதுபான வரியை உயர்த்துவது. அதன்பிறகு லஞ்சம் பெற்றுக்கொண்டு அதனைக் குறைப்பது. இதுதான் ரங்கசாமியின் வேலை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ஜே.சி.எம் என்ற ஒரு அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்.

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார்

அதன்மூலம் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை தங்கள் அமைப்பில் சேருமாறும், தேர்தலுக்குத் தேவையான நிதியைக் கொடுப்பதாகவும் கூறி வருகின்றார். அதனடிப்படையில் சிலர் அந்த அமைப்பில் சேர்ந்தும் இருக்கின்றனர். ஜோஸ் சார்லஸ் ஆரம்பித்திருக்கும் அந்த அமைப்பு, பா.ஜ.க-வின் `பி’ டீம்.

எங்களுக்கும் பா.ஜ.க-வுக்கும் சம்மந்தம் இல்லை என்று அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் பா.ஜ.க-வின் நிழலாக ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் அமைப்பு செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க-வின் அமைச்சர் ஜான்குமார், எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன் இணைந்து செயல்படுகிறார்கள்.

அவரின் படத்தோடு தீபாவளி பட்டாசு உள்ளிட்டவற்றை கொடுக்கின்றனர். ஆனால் பா.ஜ.க மாநிலத் தலைவர் ராமலிங்கம் எங்களுக்கும், ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கும் சம்மந்தமே இல்லை என்கிறார்.  மக்களை ஏமாற்றவும், திசை திருப்பவும் பா.ஜ.க மாநில தலைவர் பொய்யான தகவலை மக்களிடம் கூறி வருகின்றார்.

அவர் ஏன் ஜான்குமார் மீதும், கல்யாணசுந்தரம் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை ? அவர்களுக்கு ஏன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை ? அவர்களை பா.ஜ.க-வில் இருந்து நீக்கவில்லை. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கொடுக்கும் பேட்டியில், `இந்த அரசுக்கு ஆளத் தகுதியில்லை' என்று கூறுகிறார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

ஆனால் அவரோடு பா.ஜ.க கைகோத்து நிற்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் தொகுதிகளைக் குறிவைத்து ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேலை செய்கிறார். ஃபிரிட்ஜ் போன்றவற்றைக் கொடுக்கிறார். பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் இருக்கும் தொகுதிகளில் அவர் எந்தப் பணிகளையும் செய்யவில்லை.

இதிலிருந்து பா.ஜ.க-வின் தூண்டுதலின் பேரில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் செயல்படுகின்றார் என்பது தெளிவாகத் தெரிகிறது. முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், பச்சோந்தி போன்று செயல்படுபவர். அவர் தன்னுடைய நிறத்தை நேரத்துக்கு நேரம் மாற்றுவார். எந்தபக்கம் அலை அடிக்கிறதோ அந்தப்பக்கம் செல்வார். அதுதான் அவருடைய நிலை” என்றார்.

Bihar: முதல்வர் வேட்பாளர் யார்? பிரசாரம் தொடங்கிய மோடி; NDA-வில் முடியாத சிக்கல்!

தேர்தல்பீகார் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதற்கட்டத் தேர்தல் நவம்பர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 11-ம் தேதியும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை... மேலும் பார்க்க

TVK : 'விஜய்யின் கரூர் விசிட் கேன்சல்?' - பின்னணி என்ன?

'கரூர் திட்டம் ரத்து?'கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், விஜய்யின் கரூர் விசிட் ப்ளான் கேன்சல் செய்யப்பட்டிருப்பதா... மேலும் பார்க்க

மதுரை: "இரண்டு அமைச்சர்கள் இருந்தும் புதிய மேயரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை" - செல்லூர் ராஜு சாடல்!

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், அதிமுக-வின் 54 ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "அதிமுக-வில் மூன்றாம் தலைமுறையினர் தலை எடுத்துள்ளனர்.... மேலும் பார்க்க

SIR: `தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்’ - தேர்தல் ஆணையம்

தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் துவங்க உள்ளதாக, தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சென்னை தி.... மேலும் பார்க்க

திண்டுக்கல்: புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநர் செல்வசேகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநராக இருப்பவர் செல்வசேகர். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டி, ஏழுமலையான் நகரில் உள்ள வாடகை வீட... மேலும் பார்க்க

`உடலுறவும் உளவும்; தற்செயல்போல் தான் இருக்கும், ஆனால்!’ - Silicon Valley-யை பதறவைக்கும் சீனா, ரஷ்யா?

'அடுத்த தலைமுறை போர்கள் துப்பாக்கிகளாலோ, ஏவுகணைகளாலோ இருக்காது. சைபர் தாக்குதல்களும், பயோ-வெப்பன்களும் பயன்படுத்தப்படும்' எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் அமெரிக்காவுக்கு எதிர... மேலும் பார்க்க