செய்திகள் :

Bihar: முதல்வர் வேட்பாளர் யார்? பிரசாரம் தொடங்கிய மோடி; NDA-வில் முடியாத சிக்கல்!

post image

தேர்தல்

பீகார் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதற்கட்டத் தேர்தல் நவம்பர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 11-ம் தேதியும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

பா.ஜ.க - ஜேடியு கட்சிகள் தலா 101 இடங்களில் போட்டியிட உள்ளன. தேர்தல் கூட்டணி கணக்குகள், தொகுதிப் பங்கீடு எனத் தேர்தல் களம் தீவிரமாகி வருகிறது. மற்றொருபுறம் தேர்தல் பிரசாரமும் நடந்துவருகிறது.

பிரதமர் மோடி - நிதிஷ் குமார் - பீகார்
பிரதமர் மோடி - நிதிஷ் குமார் - பீகார்

பிரதமர் பிரசாரம்

அதன் ஒரு பகுதியாக பீகாரின் சமஸ்திபூரில் தனது பீகார் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி. அவரின் உரையில், ``இந்த முறை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அதன் முந்தைய வெற்றி சாதனைகள் அனைத்தையும் முறியடிக்கும்.

பீகார் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கும். ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் பொழிந்த அன்பால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

(அடையாள சைகையில், மொபைல் டார்ச்லைட்களை இயக்குமாறு கேட்டுக்கொண்டு) இவ்வளவு வெளிச்சம் இருக்கும்போது... நமக்கு லாந்தர் விளக்கு தேவையா?

பீகாருக்கு லாந்தர் (ஆர்.ஜே.டி) தேவையில்லை. அக்டோபர் 2005-ல் நிதிஷ் குமார் தலைமையில் NDA-வின் நல்லாட்சி தொடங்கியது. ஆனால் காங்கிரஸ் ஆர்.ஜே.டி கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தது. அப்போது பீகாருக்கு எதிராக அவர்கள் பல தடைகளை உருவாக்கினர்" என்றார்.

யார் முதல்வர் வேட்பாளர்?

இந்த நிலையில், ஆர்.ஜே.டி தலைமையிலான மகாபந்தன் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள், பா.ஜ.க தலைவர்கள் நிதிஷ் குமாரின் நிர்வாக சாதனையை பாராட்டினாலும், அவரை கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக முறையாக அறிவிக்கவில்லை.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் முகம் குறித்த நேரடி கேள்விக்கு பதிலளித்த, ​​மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``நிதிஷ் குமார் முதல்வராக இருப்பாரா இல்லையா என்பதை நான் முடிவு செய்ய வேண்டியவர் அல்ல.

இப்போதைக்கு, நாங்கள் அவரது தலைமையில் போட்டியிடுகிறோம். தேர்தலுக்குப் பிறகு, அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து முதல்வரைத் தேர்வு செய்வோம்” என்றார்.

முதல்வர் முகம்?

எனவே, நிதிஷ் குமார் முதலமைச்சராகத் தொடர்வது உறுதி செய்யப்படவில்லை. 2005 முதல், ஜே.டி.(யு) தேசிய ஜனநாயகக் கூட்டணி, மகாபந்தன் கூட்டணி என எதில் இருந்தாலும், நிதிஷ் குமாரே பீகாரின் சட்டமன்றத்தின் ஒவ்வொரு தேர்தலிலும் முதல்வர் முகமாக இருந்து வருகிறார்.

ஆனால் இந்த முறை அவர் முதல்வர் முகமாகவே தொடர்கிறாரா என்பது கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கிறது.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் முதன்முறையாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், நிதிஷ் குமார் முதலமைச்சராக நீடிப்பாரா என்ற நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. குறிப்பாக, இந்த சந்தேகம் எதிர்க்கட்சிகளிடமிருந்து அல்ல, பாஜக தலைமையிலான கூட்டணிக்குள்ளேயே இருப்பதுதான் பெரும் சோகம்.

TVK : 'விஜய்யின் கரூர் விசிட் கேன்சல்?' - பின்னணி என்ன?

'கரூர் திட்டம் ரத்து?'கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், விஜய்யின் கரூர் விசிட் ப்ளான் கேன்சல் செய்யப்பட்டிருப்பதா... மேலும் பார்க்க

மதுரை: "இரண்டு அமைச்சர்கள் இருந்தும் புதிய மேயரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை" - செல்லூர் ராஜு சாடல்!

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், அதிமுக-வின் 54 ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "அதிமுக-வில் மூன்றாம் தலைமுறையினர் தலை எடுத்துள்ளனர்.... மேலும் பார்க்க

SIR: `தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்’ - தேர்தல் ஆணையம்

தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் துவங்க உள்ளதாக, தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சென்னை தி.... மேலும் பார்க்க

`ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பாஜகவின் B டீம்தான்’ - புதுச்சேரி அரசியல் நகர்வுகளை விவரிக்கும் நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில், 200-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை... மேலும் பார்க்க

திண்டுக்கல்: புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநர் செல்வசேகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநராக இருப்பவர் செல்வசேகர். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டி, ஏழுமலையான் நகரில் உள்ள வாடகை வீட... மேலும் பார்க்க

`உடலுறவும் உளவும்; தற்செயல்போல் தான் இருக்கும், ஆனால்!’ - Silicon Valley-யை பதறவைக்கும் சீனா, ரஷ்யா?

'அடுத்த தலைமுறை போர்கள் துப்பாக்கிகளாலோ, ஏவுகணைகளாலோ இருக்காது. சைபர் தாக்குதல்களும், பயோ-வெப்பன்களும் பயன்படுத்தப்படும்' எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் அமெரிக்காவுக்கு எதிர... மேலும் பார்க்க