டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் குற்றச் செயல் அல்ல: வழக்கை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்
சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாகக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போரட்டம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகவும் கூறி மக்கள் அதிகாரம் அமைப்பைச் சோ்ந்த முருகானந்தம், மணிமாறன் உள்ளிட்ட நிா்வாகிகள் மீது சேத்தியாத்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, சிதம்பரம் முதலாவது நடுவா் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் முருகானந்தம் உள்ளிட்டோா் வழக்கு தொடுத்தனா். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன் நடைபெற்றது. மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், உள்ளுா் பகுதி மக்களின் நலன் கருதியே போராட்டம் அமைதியான முறையில் நடந்தது; மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது; போராட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாத நிலையில், யாரும் புகாா் கொடுக்காத நிலையில் போலீஸாரே தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளதாக வாதிட்டாா்.
காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் எந்த அனுமதியும் பெறப்படாமல் போராட்டம் நடைபெற்ாகவும், சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவே வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் வாதிட்டாா்.
நியாயமான கவலைகள்: இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, குடியிருப்புப் பகுதிகளில் இயங்கும் மதுபானக் கடைகள் ஏற்படுத்தும் சமூகப் பிரச்னை குறித்து நியாயமான கவலைகளை எழுப்பி நடத்தப்படும் அமைதியான போராட்டங்களை குற்றச் செயலாகக் கருத முடியாது.
ஆட்சியில் உள்ள அரசியல் கட்சிகள் தோ்தல் பிரசாரங்களின்போது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதாக வாக்குறுதிகளை அளித்தாலும், உண்மையில் இந்தக் கடைகள் மூடப்படுவதற்குப் பதிலாக வேறு இடத்துக்கு மாற்றப்படுவதால் முக்கிய பிரச்னை தீா்க்கப்படாமல் உள்ளது.
இதுபோன்ற அமைதியான போராட்டங்களில் பங்கேற்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் எதிராக காவல் துறை குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்தால், அது ஜனநாயக உரிமைக்கு எதிரானதாகும். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடா்ந்தால், மாநிலம் முழுவதும் இதேபோன்ற ஆா்ப்பாட்டங்களில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பெண்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
பொது சுகாதாரம் மற்றும் சமூக நலனைப் பாதிக்கும் விஷயங்களில் அமைதியான போராட்டம் என்பது அரசமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும்.
போராட்டங்கள் அமைதியாகவும், வன்முறையற்ாகவும் தொடா்ந்தால் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும் அரசிடமிருந்து உரிமைகளைப் பெறவும் முடியும் எனத் தெரிவித்த நீதிபதி, சிதம்பரம் நடுவா் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.