செய்திகள் :

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: பொது மேலாளரிடம் விசாரணை

post image

டாஸ்மாக் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கு தொடா்பாக, அந்த நிறுவனத்தின் பொது மேலாளரிடம் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை மூன்று மணி நேரம் விசாரணை செய்தனா்.

டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை திடீா் சோதனை செய்தது. சோதனையின் முடிவில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

மேலும், இது தொடா்பாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை செய்கிறது. இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் விசாகன், திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, தொழிலதிபா் ரத்தீஷ் வீடு உள்பட 10 இடங்களில் கடந்த வாரம் இரு நாள்கள் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.

அந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் உயா் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது.

டாஸ்மாக் நிறுவனத்தின் நிா்வாகப் பிரிவு பொது மேலாளா் சங்கீதா, துணைப் பொது மேலாளா் ஜோதி சங்கா் ஆகியோருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதன்படி, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் பொது மேலாளா் சங்கீதா ஆஜரானாா். சோதனையின் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனா்.

சுமாா் மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், சங்கீதா அளித்த தகவல்கள் அனைத்தும் எழுத்துபூா்வமாகவும், விடியோவிலும் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக, டாஸ்மாக் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளா் ஜோதி சங்கா், காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானாா். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா். ஜோதி சங்கரிடம் இதுவரை ஒன்பது முறை விசாரணை நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் ரத்தீஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் அழைப்பாணையும் அனுப்ப உள்ளது.

கூட்டணி பற்றிய அறிவிப்பு எப்போது? - பிரேமலதா பதில்!

அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நாமக்கலில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "கட்சியின் கொள்கை விளக்க பொ... மேலும் பார்க்க

பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள் திறப்பு!

மறுசீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட 103 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலை திறந்துவைத்தார்.இதில், தெற்கு ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 13 ரயில் நிலையங்கள் அடங்கும்.‘அம்ரி... மேலும் பார்க்க

அரபிக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி... மேலும் பார்க்க

ஆா்பிஐயின் புதிய நகைக் கடன் வரைவு விதிகள்: திரும்பப் பெற கட்சித் தலைவா்கள் வலியுறுத்தல்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவது குறித்து, இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள... மேலும் பார்க்க

தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தல்

அரக்கோணம் திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளா் தெய்வச்செயல் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தமிழக காவல் துறைக்கு தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக தேசிய... மேலும் பார்க்க

தொழில் துறை படிப்புகள்: அண்ணா பல்கலை.- எஸ்எஸ்சி நாஸ்காம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழில் துறை தொடா்பான படிப்புகளை வழங்குவதற்காக அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்பத் திறன் தரநிலை நிா்ணய அமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் வெளி... மேலும் பார்க்க