செய்திகள் :

டிஆா்சி: கிளா்ச்சிப் படையினா் போா் நிறுத்தம்

post image

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் (டிஆா்சி) தெற்குப் பகுதியில் முன்னேறிவரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படை தற்காலிக போா் நிறுத்தம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது தாக்குதல் நடவடிக்கைகளை செவ்வாய்க்கிழமை (பிப். 4) முதல் ஒருதலைபட்சமாக நிறுத்திவைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு வசதியாக இந்த போா் நிறுத்தம் கடைபிடிக்கப்படுவதாக எம்23 தெரிவித்துள்ளது.

காங்கே ஜனநாயகக் குடியரசின் இரண்டாவது பெரிய நகரான, முக்கியத்துவம் வாய்ந்த கோமா நகரை எம்23 கிளா்ச்சிப் படை கடந்த வாரம் கைப்பற்றியது. தாது வளம் நிறைந்த காங்கோ ஜனநாயகக் குடியரசில் செயல்படும் நூற்றுக்கணக்கான கிளா்ச்சிக் குழுக்களில் எம்23-யும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் விரைவில் போர் நிறுத்தம்! பிரான்ஸ் வலியுறுத்தல்

உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு வெகுவிரைவில் முற்றுப்புள்ளி வைக்க பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஐரோப்பிய அவசரநிலை மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன் அமெரிக்க அதிபர் ட... மேலும் பார்க்க

வாஷிங்டனில் டிரம்ப், எலானுக்கு எதிராகப் போராட்டம்!

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்று ஒரு மாதமாகும் நிலையில், அவருக்கு எதிராக வாஷிங்டனில் திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.மேலும், அரசுத் துறைகளில் தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு அளிக்கப்படும... மேலும் பார்க்க

பொய் சொன்னதற்காக எதிர்க்கட்சித் தலைவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம்!

சிங்கப்பூரில் பொய் சாட்சி கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி எதிர்க்கட்சித் தலைவர... மேலும் பார்க்க

பாலஸ்தீன அகதிகளுக்கான மீட்புப் பணிகளை ஐ.நா. மேற்கொள்ள இஸ்ரேல் பிரதமர் அறிவுறுத்தல்!

டெல் அவிவ் : பாலஸ்தீன அகதிகளுக்கான மீட்புப் பணிகளை ஐ. நா. மேற்கொள்ளலாம் என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ. நா. மீட்புப் பணிகள் முகமை(யு.என்.ஆர்.டபில்யூ.ஏ... மேலும் பார்க்க

உக்ரைன் விவகாரம்: அமெரிக்க பிரதிநிதிகளுடன் ரஷிய அமைச்சர் பேச்சுவார்த்தை!

மாஸ்கோ : ரஷியாவின் வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் அமெரிக்க அதிகாரிகளுடன் ரியாதில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். இதற்காக அவர் இன்று அதிகாலை ரியாத் சென்றடைந்தார்.உக்ரைன் விவகார... மேலும் பார்க்க

தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம்: 17 பேர் காயம்!

கனடாவின் டொராண்டோ பியர்சன் பன்னாட்டு விமான நிலையத்தில் டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்தனர்.மினியாபோலிஸில் இருந்து காலை 11.47 மணியளவில் புறப்பட்ட டெல்டா விமானம்-4819, கன... மேலும் பார்க்க