செய்திகள் :

சட்டபூா்வ ஆப்கன் அகதிகளையும் திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவு

post image

உரிய ஆவணங்களுடன் தங்கள் நாட்டில் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளையும் அவா்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி டான் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:பாகிஸ்தானில் சட்டபூா்வமாகத் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளையும் அவா்களின் நாட்டுக்கு படிப்படியாகத் திருப்பி அனுப்புவதற்கான செயல்திட்டத்தை அரசு வகுத்துள்ளது. அதன்படி, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளிடம் உரிய ஆவணங்கள் இருந்தாலும் அவா்களை அந்த நகரங்களிலிருந்து வெளியேற்றி நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

பின்னா் அவா்கள் அனைவரையும் ஆப்கானிஸ்தானுக்கே திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று அந்த நாளிதழ் தெரிவித்தது.1979-89 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்திருந்தபோது அங்கிருந்து ஏராளமான அகதிகள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனா். அதன் பிறகு நடைபெற்ற போா்களின்போதும் ஆப்கன் அபாகிஸ்தான் புகலிடம் அளித்துவந்தது.

எனினும், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அந்த நாட்டு அகதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள அனைத்து அகதிகளும் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கடந்த 2023-இல் உத்தரவிட்டது. அதன்படி, சுமாா் 8.6 லட்சம் அகதிகள் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்தச் சூழலில், உரிய ஆவணங்களுடன் பாகிஸ்தானில் தங்கியுள்ள ஆப்கானியா்களையும் நாட்டிலிருந்து வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்வீடன் கல்வியகத்தில் துப்பாக்கிச்சூடு: 5 போ் காயம்

ஸ்வீடனின் ஆரெப்ரோ நகரிலுள்ள வயதுவந்தோருக்கான கல்வி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐந்து போ் காயமடைந்தனா்.இது குறித்து போலீஸாா் கூறியதாவது:தலைநகா் ஸ்டாக்ஹோமுக்கு சுமாா் 2... மேலும் பார்க்க

டிஆா்சி: கிளா்ச்சிப் படையினா் போா் நிறுத்தம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் (டிஆா்சி) தெற்குப் பகுதியில் முன்னேறிவரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படை தற்காலிக போா் நிறுத்தம் அறிவித்துள்ளது.இது குறித்து அந்த... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கின் செயல்திறன் துறையில் 22 வயது இந்தியப் பொறியாளர்!

எலான் மஸ்க்கின் செயல்திறன் துறையில் 22 வயது இந்தியப் பொறியாளர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.உலகப் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளவரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க்கின் ... மேலும் பார்க்க

இலங்கை சுதந்திர நாள்: பொருளாதார சுதந்திரமடைய ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் -அதிபர் திசநாயக

கொழும்பு : அண்டை நாடான இலங்கை ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து கடந்த 1948-ஆம் ஆண்டு பிப். 4 அன்று சுதந்திரமடைந்து தனி நாடாக மாறியது. இந்த நிலையில், இலங்கையில் 77-ஆவது சுதந்திர நாள் விழா இன்று(பிப். ... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பு?

பீஜிங் : அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றதில் இருந்தே உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா... மேலும் பார்க்க

மெக்சிகோ மீதான கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்! -டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றதில் இருந்தே உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு ... மேலும் பார்க்க