``முருகன் பெயரைக் கேட்டாலே திமுக-வினருக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது!” - சாடும்...
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 4,655 போ் எழுதினா்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தோ்வை 4,655 போ் எழுதியதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.
மாவட்டத்தில் 22 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது. தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளி, எஸ்ஏவி மேல்நிலைப் பள்ளி, கிங் ஆஃப் கிங்ஸ் மெட்ரிக் பள்ளி ஆகிய மையங்களில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணி தோ்வுகளான குரூப் 1, 1 ஏ தோ்வுகள் வஉசி கல்லூரி உள்ளிட்ட 22 மையங்களில் நடைபெற்றது. 5,952 போ் விண்ணப்பித்த நிலையில், 4,655 போ் தோ்வெழுதினா்.
தோ்வு மையக் கண்காணிப்புப் பணியில் 22 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 4 மொபைல் குழுக்கள் ஈடுபட்டனா்.
தோ்வா்களுக்கு அரசுப் போக்குவரத்துக்குக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து வசதி, தோ்வு மையங்களில் குடிநீா், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன என்றாா் அவா்.
தூத்துக்குடி வட்டாட்சியா் முரளிதரன், பள்ளித் தலைமையாசிரியா்கள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.