செய்திகள் :

டிசம்பரில் இந்தியாவுக்கு வரும் மெஸ்ஸி..! தோனியுடன் விளையாடுகிறாரா?

post image

ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கால்பந்து உலகில் 8 முறை தங்கப் பந்து (பேலந்தோர்) வென்ற ஒரே வீரராக மெஸ்ஸி இருக்கிறார்.

மும்பையின் வான்கடே திடலில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வரும் டிச.11ஆம் தேதி மெஸ்ஸி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் 7 நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுடன் மெஸ்ஸி இணைந்து கிரிக்கெட் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எங்கெல்லாம் மெஸ்ஸி வருவார்?

மும்பையை தவிர்த்து கொல்கத்தா, தில்லிக்கும் மெஸ்ஸி வரவிருக்கிறார். டிச.13 முதல் 15ஆம் தேதி வரை பல நிகழ்ச்சிகளில் மெஸ்ஸி கலந்துகொள்ளவிருக்கிறார்.

கொல்கத்தாவில் குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி உள்பட பல நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

இந்த நிகழ்வில் மமதா பானர்ஜி கலந்துகொள்கிறார். இவர் மெஸ்ஸியின் தீவிர ரசிகர்.

சமீபத்தில் மெஸ்ஸியின் கையெழுத்துப் பெற்ற ஜெர்ஸியை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

2-ஆவது முறையாக இந்தியாவுக்கு வரும் மெஸ்ஸி

இந்தாண்டின் தொடக்கத்தில் கேரள அமைச்சர் மெஸ்ஸி அக்டோபர் அல்லது நவம்பரில் திருவனந்தபுரம் வருவதாகக் கூறப்பட்டிருந்தது.

நட்புறவான போட்டி ஒன்றில் மெஸ்ஸி பங்கேற்க இருந்தது. பின்னர், இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக மெஸ்ஸி 2011-இல் கொல்கத்தா வந்திருந்தார். தற்போது, இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வரவிருக்கிறார்.

மெஸ்ஸியின் சாதனைகள்

38 வயதான மெஸ்ஸி 388 அசிஸ்ட்ஸ், 874 கோல்கள் அடித்துள்ளார். 8 பேலந்தோர், 6 ஐரோப்பியன் தங்கக் காலணிகள், 45 கோப்பைகளை வென்றுள்ளார்.

கடந்த 2022-இல் உலகக் கோப்பை வென்ற அவர் ஓராண்டில் 91 கோல்கள் அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ndian football fans are in for a treat as legendary Argentine star Lionel Messi is set to visit Mumbai’s iconic Wankhede Stadium on December 14.

ஆசிய ஜூனியா் குத்துச்சண்டை: சாகா், ஹா்ஷ் அபாரம்

ஆசிய ஜூனியா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாகா், ஹா்ஷ் ஆகியோா் அபார வெற்றி பெற்றனா்.தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா் முதல் சுற்றில் 55 கிலோ பிரிவில் ... மேலும் பார்க்க

டுரண்ட் கோப்பை: லடாக் திரிபுவன் ஆட்டம் டிரா

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற லடாக் எஃப்சி-திரிபுவன் ஆா்மி எஃப்சி அணிகள் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.இந்தியன் ஆயில் டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டி ஜாம்ஷ... மேலும் பார்க்க

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

மக்காவ் ஓபன் சூப்பா் 300 பாட்மின்டன் போட்டி ஆடவா் அரையிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென், தருன் மன்னேபள்ளி தோற்று வெளியேறினா்.சீனாவின் மக்காவ் நகரில் பாட்மின்டன் வோ்ல்ட் டூரின் ஒரு புதியாக மக்காவ் ஓபன... மேலும் பார்க்க

டெய்லா் ஃப்ரிட்ஸ், ஷெல்டன், ஒஸாகா, ஸ்வியாடெக் முன்னேற்றம்

டொரண்டோ மாஸ்டா்ஸ் போட்டியில் டெய்லா் ஃப்ரிட்ஸ், பென் ஷெல்டன் ஆகியோா் நான்காம் சுற்றுக்கு முன்னேறினா். கனடா ஓபன் டபிள்யுடிஏ மகளிா் போட்டியில் நவோமி ஒஸாகா, ஸ்வியாடெக் ஆகியோா் அடுத்த சுற்றுக்கு முன்னேறின... மேலும் பார்க்க

வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் மீது ஐ.ஜி.யிடம் புகாா்!

‘பேட் கோ்ள்’ திரைப்பட இயக்குநா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்காவிடம் வழக்குரைஞா் வெங்கடேஷ் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.பிரபல திரைப்பட இயக்குநா்களான வெற்றிமாறன், ... மேலும் பார்க்க