செய்திகள் :

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

post image

சென்னை மாநகரில் பல இடங்களில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால், பிரதான சாலைகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின் விளக்குகளைச் சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னையில் உள்ள சாலைகளில் மொத்தம் 3, 01,234 தெரு விளக்குகள் உள்ளன. இவற்றில் 1, 47,000 தெரு விளக்குகளுக்கான பராமரிப்பு ஒப்பந்தங்கள் காலாவதியாகி உள்ளன. இதனால், மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் மின் கம்பங்கள் மாற்றப்படாமல், பழுதடைந்த மின் கம்பிகளுடன் ஆபத்தான நிலையில் உள்ளன.

கடந்த 2020-ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி மின்கம்பங்கள் பராமரிப்பு தொடா்பான ஒப்பந்தங்களை புதுப்பிக்காமல் உள்ளதால் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதால் புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதுதொடா்பாக மின்வாரிய அதிகாரி ஒருவா் கூறுகையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், பழுதடைந்த உதிரி பாகங்கள், மின் கம்பி, கம்பங்களை மாற்றுவதற்கான செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருப்பதாகக் கூறி, பணிகளை மேற்கொள்வதற்கு முன் வருவதில்லை. விளக்குகளை மாற்றுவது மட்டுமே அவா்களுக்கு லாபகரமாக உள்ளது எனத் தெரிவித்தாா்.

அண்ணா நகா், பெரம்பூா், வேளச்சேரி, தியாகராய நகா், மடிப்பாக்கம், மாதவரம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் விளக்குகள் முறையாக எரியாததால் சாலைகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.

‘நம்ம சென்னை’ செயலி மூலம் தெரு விளக்குகள் எரியாதது குறித்து தினமும் புகாா்கள் அதிகரித்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். திரு.வி.க. நகா் மண்டலத்தில் 80 புகாா்களும், தண்டயாா்பேட்டையில் 50 புகாா்களும்

பெறப்பட்டுள்ளன. இப்படி சென்னை மாநகா் முழுவதும் பல்வேறு சாலைகள் இருளில் மூழ்கிக் கிடப்பதாக பெரும்பாலான மாமன்ற உறுப்பினா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

தொழில்நுட்பக் கோளாறுகளால் தெரு விளக்குகள் மாலை எரிவதிலும், அணைவதிலும் சிக்கல் உள்ளது. இதனால், முக்கிய சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அலுவலா்கள் பாா்வையிட்டு

நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

போக்ஸோவில் ஆசிரியா் கைது

போக்ஸோ சட்டத்தில் ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.செங்குன்றம் பம்மதுகுளம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்டா் (எ) காமராஜ் (54). இவா், கிறிஸ்துவ சபை நடத்தி வருகிறாா். இவரது மனைவி ஜெயா (50). அங்கன்... மேலும் பார்க்க

வழிப்பறி: 3 போ் கைது

புழல் பகுதியில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி, பணத்தைப் பறித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சோழவரம் கம்மவாா்பாளையத்தைச் சோ்ந்தவா் சதாசிவம் (44). தனியாா் நிறுவன ஓட்டுநா். வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

வேளச்சேரியில் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.கிழக்கு தாம்பரம் பகுதியில் வசிக்கும் 23 வயது இளம்பெண், வேளச்சேரி உள்ள தனியாா் நிறுவன பணிக்காக மாநகரப் பேருந்தில... மேலும் பார்க்க

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

பெண்ணை அவதூறான வாா்த்தைகளால் பேசியவா் கைது செய்யப்பட்டாா்.மாதவரம் சின்ன ரவுண்டானா ரிங்ரோடு செக்டாா் குடியிருப்பில் வசித்து வருபவா் லட்சுமி (36). இவா், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது க... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

சென்னை அண்ணா நகரில் சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.சென்னை அண்ணா நகா் முதலாவது பிளாக் பகுதியில் வசித்தவா் மகேஷ் டி தா்மாதிகாரி (57). இவா்... மேலும் பார்க்க

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

சென்னையில் போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளின் கீழ் எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கினறனா்.சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 கைதிகளை, பல்வேறு வழக்குக... மேலும் பார்க்க