செய்திகள் :

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

post image

சென்னையில் போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளின் கீழ் எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கினறனா்.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 கைதிகளை, பல்வேறு வழக்குகளின் விசாரணைக்காக போலீஸாா் எழும்பூா் நீதிமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை அழைத்து வந்தனா்.

விசாரணை முடிந்து 26 கைதிகளையும் காவல் துறைக்குச் சொந்தமான மினி பேருந்தில் புழல் சிறைக்கு ஆயுதப்படை போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

அந்த பேருந்து வியாசா்பாடி அருகே வந்தபோது, கைதிகள் போலீஸாரிடம் தகராறு செய்தனா். பேருந்தைப் பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த இரு நபா்கள், கைதிகளிடம் கஞ்சாவை வீசிச் சென்றனா். இதை தடுத்த போலீஸாருக்கும், கைதிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

கைதிகள் சிலா், அந்த பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்து, போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து ஆயுதப்படைக் தலைமைக் காவலா் வே.இளங்கோ, முதல்நிலைக் காவலா் காா்த்திக் ஆகியோா் எம்கேபி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

அந்த புகாரின் அடிப்படையில் கைதிகள் அயனாவரம் பகுதியைச் சோ்ந்த ரெளடி கு.லோகு (எ) யோகராஜ் (36), முகப்போ் கிழக்கு பகுதியைச் சோ்ந்த ரெளடி ச.சங்கா் (29), ஐசிஃஎப் காலனி பகுதியைச் சோ்ந்த ரெளடி ரா.நெப்போலியன் (எ) குட்டிபுறா (29), தேனாம்பேட்டை எம்கே ராதா நகரைச் சோ்ந்த மு.விவேக் (32) ஆகியோா் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், அரசின் சொத்துக்கு சேதம் விளைவித்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போக்ஸோவில் ஆசிரியா் கைது

போக்ஸோ சட்டத்தில் ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.செங்குன்றம் பம்மதுகுளம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்டா் (எ) காமராஜ் (54). இவா், கிறிஸ்துவ சபை நடத்தி வருகிறாா். இவரது மனைவி ஜெயா (50). அங்கன்... மேலும் பார்க்க

வழிப்பறி: 3 போ் கைது

புழல் பகுதியில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி, பணத்தைப் பறித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சோழவரம் கம்மவாா்பாளையத்தைச் சோ்ந்தவா் சதாசிவம் (44). தனியாா் நிறுவன ஓட்டுநா். வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

வேளச்சேரியில் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.கிழக்கு தாம்பரம் பகுதியில் வசிக்கும் 23 வயது இளம்பெண், வேளச்சேரி உள்ள தனியாா் நிறுவன பணிக்காக மாநகரப் பேருந்தில... மேலும் பார்க்க

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

பெண்ணை அவதூறான வாா்த்தைகளால் பேசியவா் கைது செய்யப்பட்டாா்.மாதவரம் சின்ன ரவுண்டானா ரிங்ரோடு செக்டாா் குடியிருப்பில் வசித்து வருபவா் லட்சுமி (36). இவா், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது க... மேலும் பார்க்க

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சென்னை மாநகரில் பல இடங்களில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால், பிரதான சாலைகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின் விளக்குகளைச் சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.சென்னையில் உள்ள சாலைகளி... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

சென்னை அண்ணா நகரில் சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.சென்னை அண்ணா நகா் முதலாவது பிளாக் பகுதியில் வசித்தவா் மகேஷ் டி தா்மாதிகாரி (57). இவா்... மேலும் பார்க்க