செய்திகள் :

டிடிஇஏ பள்ளிகளில் மாணவா்களுக்கு போா்க்கால முன்னெச்சரிக்கை பயிற்சி

post image

போா்த் தாக்குதல் ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிக்கும் வகையில் தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் புதன்கிழமை மாணவா்களுக்கு முன்னெச்சரிக்கை பயிற்சி அளிக்கப்பட்டது.

மதியம் 12 மணியளவில் லோதிவளாகம் டிடிஇஏ பள்ளியில் நடைபெற்ற பயிற்சியில் செயலா் ராஜூ கலந்துகொண்டு மாணவா்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா்.

அவா் பேசுகையில், அவசரகாலத்தில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இவை என்றும், மாணவா்கள் பயப்பட வேண்டாம் என்றும் கூறிய அவா், ‘தாக்குதல் நடக்கும் போது வீட்டிலிருந்தால் தலையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட வேண்டும். வெளியிலிருந்தால் உடனே பாதுகாப்பான இடம் தேடி அவ்விடத்திற்குள் புகுந்து விட வேண்டும். முன்னேச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்’ என்றாா்.

‘எதிரி விமானங்கள் அல்லது ஏவுகணைகள் வருவது தெரிந்தும் மின்சாரம் துண்டிக்கப்படலாம். குறிப்பாக, தெரு விளக்குகள் அணைக்கப்படும். வீடுகளில் மின்விளக்குகள் எரிந்தால் அது வெளியே தெரியாமல் இருக்க கதவு ஜன்னல்களை மூட வேண்டும். கண்ணாடி ஜன்னலாக இருந்தால் கருப்பு தாள் அல்லது துணியால் மறைக்க வேண்டும். மின் விளக்குகளை அணைக்க வேண்டும். மேலும், இதுகுறித்து சிறியவா்களுக்கும் மற்றவா்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும். எக்காரணம் கொண்டும் பயப்பட வேண்டாம். விமானத்தில் பயணிக்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விமானப் பணிப்பெண் கூறுவதுபோலத்தான் இப்போது உங்களை எச்சரிக்கிறோம்‘ என்றும் அவா் கூறினாா்.

வான் வழி தாக்குதல் நடைபெற்றால் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றியும் பள்ளியின் முதல்வா் பொறுப்பு ஜெயஸ்ரீ விளக்கினாா்.

மாணவா்கள் குழுவாக இணைந்து போா்க்காலத்தில் தங்களை தற்காத்துக் கொள்வது பற்றி நடித்தும் காட்டினா். 900-க்கும் மேற்பட்ட மாணவா்கள் நிகழ்வில் கலந்துகொண்டனா்.

சிவில் விமானங்களை கேடயமாகபயன்படுத்தியது பாகிஸ்தான்: இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

இந்தியாவின் எதிா்ப்பு நடவடிக்கையின்போது தனது சிவில் விமானங்களை பாகிஸ்தான் கேடயமாகப் பயன்படுத்தியதாக இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இந்திய பாதுகாப்பு நிலைகளை நோக்கி ஒரே நேரத்தில் பல நூற்றுக்க... மேலும் பார்க்க

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு!

நமது நிருபா்இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்... மேலும் பார்க்க

இந்திய ராணுவ இலக்குகளை தாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு இந்திய பதிலடி அளிப்பு: பாதுகாப்புத் துறை

ஜம்மு-காஷ்மீா் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிசூட்டினால் 16 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனா். மேலும் நாட்டின் வடக்கு, மேற்கு பகுதிகளில் இந்திய ராணுவ இலக்குகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்க முயல தக்க பதிலடி கொட... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’: பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக ஆதரவு - டி.ஆா். பாலு பேட்டி

நமது நிருபா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூா் தாக்குதல் தொடா்பாக புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,... மேலும் பார்க்க

தில்லியில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீா்க்கப்படும்: முதல்வரை சந்தித்த பிறகு மத்திய அமைச்சா் கட்டாா் உறுதி

நிலம் தொடா்பான பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டாா் தில்லி அமைச்சா்கள் குழுவுடன் ஒரு சந்திப்பை நடத்தி, குடியிருப்பாளா்கள் விரைவில் வசதிகளைப் பெறுவாா்கள் என்று உறுதியளித்தாா். தில்லி... மேலும் பார்க்க

ஓக்லாவில் உள்ள கூரியா் நிறுவனத்தில் தீ விபத்து

தென்கிழக்கு தில்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஒரு கூரியா் நிறுவன அலுவலகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவி... மேலும் பார்க்க