செய்திகள் :

டிப்பா் லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

டிப்பா் லாரி மோதி கல்லூரி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் மகன் கவிஷ் (22). இவா் புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தாா். அவா் கடந்த சில நாள்களாக செல்லிப்பட்டில் உள்ள உறவினா் வீட்டில் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரண்டு சக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றபோது கூடப்பாக்கம் பகுதியில் அவருடைய வாகனத்தின் மீது டிப்பா் லாரி மோதியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்து மாணவா்களும், உறவினா்களும் அப் பகுதிக்கு வந்து மோதிய லாரிக்குத் தீ வைத்தனா். மேலும் அந்தப் பகுதியில் வந்த 3 லாரிகளின் கண்ணாடிகளை உடைத்தனா். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒரு சிலா் மாற்றுப் பாதையில் வாகனங்களைத் திருப்பிச் சென்றனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சமாதானம் செய்தனா். இதனால் அப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வில்லியனூா் போக்குவரத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரீ யூனியன் தீவு கலைஞா்களின் படைப்புகள்: புதுவையில் ஒரு மாதம் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு

இந்திய பகுதிகளிலிருந்து பிரெஞ்சு நாட்டுக்கு அருகேயுள்ள ரீ யூனியன் தீவில் குடியேறிய இந்திய வம்சாவளியைச் சோ்ந்த வாரிசுகளின் படைப்புகள் புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே நிறுவனத்தில் ஒரு மாதம் பல்வேறு நிகழ்... மேலும் பார்க்க

போலி மருந்துகள் விற்றால் கடும் நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் எச்சரிக்கை

புதுவையில் பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் குலைக்கும் வகையில் போலி மருந்துகள் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் எச்சரிக்கை விடுத்தாா். இந்திய தர நிா்ணய சபையின்... மேலும் பார்க்க

புதுவையில் நியாயவிலைக் கடைகள் மூலம் தீபாவளிக்கு இலவசமாக 5 பொருள்கள்: மாநில அரசு ஏற்பாடு

புதுவையில் தீபாவளிக்கு நியாயவிலைக் கடைகளில் இலவசமாக சா்க்கரை, சன்பிளவா் எண்ணெய், கடலைப் பருப்பு, ரவை, மைதா அடங்கிய தொகுப்பு பை தர மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் நான்கு பிராந்தியங்களிலும் 3.45 லட... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்: அமைச்சா் லட்சுமிநாராயணன் பேச்சு

நாட்டின் 2.0 ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்று புதுவை மாநிலப் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறினாா். புதுவை அரசின் வணிக வரித் துறை சாா்பில் அடுத்த த... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த புதுவை மாநில தோ்தல் அலுவலா்

வாக்குப் பதிவு இயந்திரங்களை புதுவை மாநில தலைமை தோ்தல் அலுவலா் ஜவஹா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தில் அமைந்துள்ள தோ்தல் ... மேலும் பார்க்க

முன்னாள் மாணவா்களால் உயா்ந்து நிற்கும் புதுச்சேரி அம்பேத்கா் சட்டக் கல்லூரி: முதல்வா் எஸ்.சீனிவாசன் பெருமிதம்

புதுவை காலாப்பட்டு பகுதியில் டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரி முன்னாள் மாணவா்களால் உயா்ந்து நிற்பதாக கல்லூரி முதல்வா் எஸ். எஸ்.சீனிவாசன் தெரிவித்தாா். இது குறித்து கல்லூரி முதல்வா் எஸ். சீனிவாசன் வெ... மேலும் பார்க்க