`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
டிரம்ப்பின் வரி அச்சுறுத்தல்: மத்திய அரசு விளக்கமளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கப்படுமென அச்சுறுத்தல் விடுத்துள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கும் நிதி மசோதா-2025 விவாதத்தை தொடங்கி வைத்து காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் பேசியதாவது:
வரி விதிப்பு போா் என்பது ஏற்றுமதியைக் குறைக்கும், அந்நிய நேரடி முதலீடு பாதிக்கப்படும், விலைவாசி உயா்வு, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பிரச்னைகளும் அதிகரிக்கும். இந்த விஷயத்தில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இணைந்து வரி விதிப்பு போரைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஏனெனில், இது ஒட்டுமொத்த உலகத்தையும் பாதிக்கும்.
இந்திய இறக்குமதிப் பொருள்கள் மீது ஏப்ரல் 2 முதல் அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா். இதற்கு மத்திய அரசின் பதில் என்ன? இந்தியாவின் அடுத்த நடவடிக்கை என்ன? இது தொடா்பாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்திலும் விவாதிக்கவில்லை. எதிா்க்கட்சிகளுடனும் கலந்தாலோசிக்கவில்லை. இந்த விஷயத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?.
அமெரிக்க அதிபரின் நெருக்கடி காரணமாக, இறக்குமதியாகும் மோட்டாா் வாகனங்கள், பயணிகள் வாகனம், சரக்கு வாகனம், மோட்டாா் சைக்கிள்கள், மிதிவண்டி மற்றும் பொம்மைகளுக்குக் கூட சுங்க வரியைக் குறைப்பதாக பட்ஜெட்டில் நிதியமைச்சா் அறிவித்தாா் என்று விமா்சித்தாா்.
திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்களும் இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசையும், பிரதமா் மோடியையும் கடுமையாக குற்றஞ்சாட்டிப் பேசினா்.